முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 389 அகதி என ஏற்றுக்கொள்ளப்பட்டவரின் விசாரத்து காரணம் என்ன? ரத்துச் செய்யப்பட்டு,

மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமிலிருந்து நேற்றுமுன்தினம் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளவர்களது விசாக்கள்,
குடிவரவுச்சட்டம் பிரிவு 501-இன் கீழ் நடத்தை(character) அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் என கருதப்பட்டு விசா ரத்துச் செய்யப்பட்டவர்களே, இவ்வாறு கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டிருப்பதாக, ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையின் பேச்சாளர் SBS-இடம் தெரிவித்தார். சுமார் 12 பேர் இவ்வாறு முன்னறிவித்தல் எதுவுமின்றி, மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் குடிவரவுத் திணைக்களத்தினால் அகதி என ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் உட்பட அகதிகள் சிலரும் அடங்குவதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அகதி என ஏற்றுக்கொள்ளப்பட்டவரின் விசா ரத்துச் செய்யப்பட்டு, அவர் குடிவரவு தடுப்புமுகாமில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும், இதற்கெதிராக விக்டோரிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ள பின்னணியில் இவரது சட்டத்தரணிக்கு அறிவிக்கப்படாமலேயே அவர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நேற்றுமுன்தினம் பிற்பகல், குறித்த 12 பேரையும் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்செல்வதற்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமிற்கு வெளியே இடம்பெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததுடன் பொலிஸார் Pepper Spray-ஐ பயன்படுத்தியிருந்தனர். குறித்த சம்பவத்தில் பொலிஸார் நடந்துகொண்ட முறை, மனிதர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டியதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிரீன்ஸ் கட்சி செனட்டர் Lidia Thorpe குற்றம்சாட்டியுள்ளார். இதுஒருபுறமிருக்க மொறிசன் அரசினால் கடந்த ஆகஸ்ட் 2020 இல் மீண்டும் திறக்கப்பட்ட கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் சுமார் 212 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Prime Minister Scott Morrison speaks during Question Time at Parliament House in Canberra. விசா தொடர்பில் அரசுக்கு கூடுதல் அதிகாரம்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?