மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமிலிருந்து நேற்றுமுன்தினம் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளவர்களது விசாக்கள், குடிவரவுச்சட்டம் பிரிவு 501-இன் கீழ் நடத்தை(character) அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் என கருதப்பட்டு விசா ரத்துச் செய்யப்பட்டவர்களே, இவ்வாறு கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டிருப்பதாக, ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையின் பேச்சாளர் SBS-இடம் தெரிவித்தார்.
சுமார் 12 பேர் இவ்வாறு முன்னறிவித்தல் எதுவுமின்றி, மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் குடிவரவுத் திணைக்களத்தினால் அகதி என ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் உட்பட அகதிகள் சிலரும் அடங்குவதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
அகதி என ஏற்றுக்கொள்ளப்பட்டவரின் விசா ரத்துச் செய்யப்பட்டு, அவர் குடிவரவு தடுப்புமுகாமில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும், இதற்கெதிராக விக்டோரிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ள பின்னணியில் இவரது சட்டத்தரணிக்கு அறிவிக்கப்படாமலேயே அவர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றுமுன்தினம் பிற்பகல், குறித்த 12 பேரையும் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்செல்வதற்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமிற்கு வெளியே இடம்பெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததுடன் பொலிஸார் Pepper Spray-ஐ பயன்படுத்தியிருந்தனர்.
குறித்த சம்பவத்தில் பொலிஸார் நடந்துகொண்ட முறை, மனிதர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டியதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிரீன்ஸ் கட்சி செனட்டர் Lidia Thorpe குற்றம்சாட்டியுள்ளார்.
இதுஒருபுறமிருக்க மொறிசன் அரசினால் கடந்த ஆகஸ்ட் 2020 இல் மீண்டும் திறக்கப்பட்ட கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் சுமார் 212 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Prime Minister Scott Morrison speaks during Question Time at Parliament House in Canberra.
விசா தொடர்பில் அரசுக்கு கூடுதல் அதிகாரம்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்