இலங்கை மக்களுக்கு திமுக ஒரு கோடி ரூபாய் நிதி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
இதேபோல், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஒரு மாத ஊதியத்தையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கின்றனர்.'' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் இருந்து உணவு, உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, முதல்கட்டமாக, தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்