முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 966 அவுஸ்திரேலியா அனைத்து மாநிலங்களிலும் பொருட்கள் வீடுகளின் விலை இரு மடங்காக அதிகரிப்பு

 

ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளில் வீடுகளின் விலை எங்கே இருமடங்காக உயர்ந்துள்ளது?

இந்த இரண்டு தலைநகரங்களில் 10 ஆண்டுகளுக்குள் வீடுகளின் விலைகள் இரட்டிப்பாகியுள்ளன, ஆனால் ஆஸ்திரேலியாவின் மற்ற இடங்களில் இதற்கு அதிக காலம் எடுக்கிறது.

A landscape view of houses.

Hobart house prices are increasing more quickly than elsewhere in Australia, according to a new report. Source: AAP / Dave Hunt

சிட்னி மற்றும் ஹோபார்ட்டில் ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலப்பகுதியில் வீட்டு மதிப்புகள் இரட்டிப்பாக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளில் நிலைமை அவ்வாறு இல்லை என்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில் சில சொத்துக்களின் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இதேவேளை அடுத்த ஆண்டில், சில நகரங்களில் வீடுகளின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஆஸ்திரேலியா முழுவதும் சொத்து மதிப்பு இரட்டிப்பாக எவ்வளவு காலம் எடுத்தது மற்றும் அடுத்த நிதியாண்டில் விலைகள் எவ்வாறு மாறலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

சொத்து மதிப்பு இரட்டிப்பாக்க ஏழு முதல் 10 ஆண்டுகள் தேவை என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் மே 2023 வரை, சராசரியாக வீட்டின் விலை இரட்டிப்பாகுவதற்கு 15.4 ஆண்டுகள் எடுத்ததாக புதிய PropTrack ஆய்வு காட்டுகிறது.

Units-க்கு சுமார் 17.8 ஆண்டுகள் தேவைப்பட்டது.

இந்தப்பின்னணியில் டாஸ்மேனியாவின் தலைநகரில் வீடுகளின் விலை இருமடங்கு அதிகரிக்க வெறும் 6.8 ஆண்டுகள் எடுத்துள்ளன. Units-க்கு 7.8 ஆண்டுகள் எடுத்துள்ளன.

இதேநேரம் சிட்னியில் வீடுகளுக்கு 9.6 ஆண்டுகளும் Units-க்கு 17.3 ஆண்டுகளும் எடுத்துள்ளன.
Table showing how much house prices have increased in different places in Australia.
House prices have doubled fastest in Western Australia's outback north region. Source: SBS
டாஸ்மேனியா, விக்டோரியா மற்றும் NSW மாநிலங்களின் சில பிராந்திய பகுதிகளில் உள்ள வீடுகளின் மதிப்புகள் 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் அவற்றின் முந்தைய மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகரித்தன.

உங்கள் பகுதியில் வீடுகளின் விலை இரட்டிப்பாக எத்தனை வருடங்கள் ஆகியது என்பதை இந்த வரைபடத்தில் காணலாம்.
Domain-இன் 2023-24 நிதியாண்டுக்கான வீட்டு விலை
முன்னறிவிப்பு அறிக்கையின்படி, சிட்னி, அடிலெய்ட் மற்றும் பெர்த்தில் வீடுகளின் விலை புதிய உச்சத்தை எட்டும்.

மேலும் ஆஸ்திரேலியாவின் மிகவும் விலையுயர்ந்த நகரமான சிட்னியில் சராசரி வீட்டின் விலை $1.62 மில்லியன் முதல் $1.66 மில்லியன் வரை காணப்படும்.

அதேநேரம் பிரிஸ்பேன், அடிலெய்ட் மற்றும் ஹோபார்ட் ஆகிய நகரங்களில் Unit விலைகள் புதிய சாதனை உச்சத்தை எட்டக்கூடும் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.

Regional பகுதிகளில் வீடு மற்றும் Unit விலைகள் வரவிருக்கும் நிதியாண்டில் "சுமாராக" அதிகரிக்கும் என்று அறிக்கை கணித்துள்ளது. அத்துடன் வீடுகளின் விலைகள் Unitsஐ விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடுகளின் விலைகள் 10 ஆண்டுகளில் மிகவும் மெதுவாக அதிகரித்துள்ள சில இடங்களின் பட்டியல் கீழ்க்காணும் படத்தில் உள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?