முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

D 930 இதயநோய் தொடர்வானது கண்டிபபாக அனைவரும் பார்க்க வேண்டியது,

எவருக்கெல்லாம் இதயநோய் வரும் தெரியுமா -வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்
இதயம் சார்ந்த நோய்கள் கடந்த பத்தாண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளன. மிகவும் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் பாதிப்பு அதிகரித்திருப்பது தான் மேலும் கவலைக்குரிய விடயம் என்பதுடன் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயமாகவும் மாறியுள்ளது. இதயம் சார்ந்த நோய்களுக்கு மார்பக வலி , தாடையில் அல்லது பின்பக்கம் வலி, காரணம் இல்லாத களைப்பு அல்லது சோர்வு, மூச்சுத்திணறல், இருமல், மயக்கம், திடீர் கால் வீக்கம் அல்லது நீர் சேர்வது ஆகியவை கவனத்தில் கொள்ள வேண்டிய அறிகுறிகளாக கருதப்படுகிறது. இதயநோய் அதிகம் தாக்குவது யாரை எவருக்கெல்லாம் இதயநோய் வரும் தெரியுமா -வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல் | Do You Know Who Gets Heart Disease இன்றைய உலகில் நாம் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் செய்து முடித்துவிடுகிறோம். இதனால் உடலானது நோய்களின் கூடாரமாகி விடுகிறது.உடல் எடை அதிகமாகிறது, கூடவே மன அழுத்தமும் ஏற்படுகிறது. குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் இரத்த அழுத்த நோய் வரலாம் என்பதால் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். உலகத்தில் 80% மரணங்கள் இதய நோய்களாலேயே ஏற்படுகிறது. ஆனால், 80% இதய நோய்களைத் தடுக்க முடியும் என்பதுதான் உண்மை. தூக்கம் அவசியம் எவருக்கெல்லாம் இதயநோய் வரும் தெரியுமா -வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல் | Do You Know Who Gets Heart Disease இப்போது முதியவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களுக்கும் இதய நோய் ஏற்படுகிறது. உடல் புத்துணர்ச்சி பெற தூக்கம் அவசியம். தூக்கமின்மை இதய நோய், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற நல்ல தூக்கம் அவசியம். இதய பாதிப்பு உள்ளவர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும். உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மன அமைதி, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் இதயம் காக்கலாம். இதய நோய் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?