முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 912 அவுஸ்திரேலியாவில் பாரிய விவத்து

திருமணத்துக்கு சென்று வந்தவர்களைப் பலியெடுத்த பேருந்து விபத்து! NSW மாநிலத்தில் பேரவலம்!!
நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் Hunter Valley பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில், 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு விருந்தினர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர், இருபத்து ஐந்துபேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் Hunter Valley பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்துள்ள காவல்துறையினர் மற்றும் அவசர சேவைப்பிரிவினர், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தடம்புரண்டு கவிழ்ந்து கிடக்கும் பேருந்துக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். Wandin Estate wineryயில் இடம்பெற்ற திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது, Greta அருகே உள்ள Wine Country Drive சுற்று வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாதையிலிருந்து விலகி புரண்டு பள்ளத்திற்குள் விழுந்ததால் இந்தப் பேரவலம் இடம்பெற்றிருப்பதாக சம்பவ இடத்துக்குச் சென்றுள்ள காவல்துறையினர் கூறுகிறார்கள். பேருந்தில் சிறுவர்கள் யாரும் பயணம் செய்திருக்கவில்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளார்கள். Advertisement காயமடைந்தவர்கள் பலர் தரை வழியாகவும் வான் வழியாகவும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். 58 வயதான பேருந்து ஓட்டுனர் காயங்களுடன் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெருமளவிலான அவசர சேவைப்பிரிவினர் Wine Country Drive பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாநில Premier சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். பிரதமர் Anthony Albanese சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?