முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 921 சிறுபாண்மை தமிழர்களின் பிரச்சனைக்கு இது முடிவு கட்டுமா?

ஐரோப்பா மீது அணுகுண்டு தாக்குதல் உறுதி - ரஷ்ய மக்களை வெளியேற உத்தரவு.
.! ஐரோப்பாவில் அணு ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ரஷ்ய மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அரசாங்கம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் Segey Karaganov என்பவர் தெரிவிக்கையில், ஐரோப்பா மீதான அணு ஆயுத தாக்குதல் என்பது காலத்தின் கட்டாயம் எனவும், ஆனால் அதற்கு முன்னர் இந்த நாடுகளில் குடியிருக்கும் ரஷ்ய மக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கை கவுன்சில் தலைவராக செயல்பட்டு வருபவர் இந்த Segey Karaganov. உக்ரைனுக்கு ஆயுத பலத்தை அதிகரிக்க செய்யும் நாடுகள் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த விளாடிமிர் புடின் ஒப்புதல் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், இதனால் அவர்கள் கண்டிப்பாக ரஷ்யாவிடம் மண்டியிடுவார்கள் என்றார். அமெரிக்கா பதில் தாக்குதல் ஐரோப்பா மீது அணுகுண்டு தாக்குதல் உறுதி - ரஷ்ய மக்களை வெளியேற உத்தரவு..! | European Nuclear Targets Kremlin Warn Russians பிரித்தானியாவும் அமெரிக்காவும் தான் உக்ரைனுக்கு இதுவரை அதிகமான ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதனிடையே, இந்த போரில் தம்முடன் இணையும் நாடுகளுக்கு அணு ஆயுதம் அளிக்கப்படும் என ரஷ்யா தற்போது வாக்குறுதி அளித்துள்ளது. ரஷ்யாவால் மட்டுமே கொள்கையுடன் செயல்பட முடியும் என குறிப்பிட்டுள்ள Segey Karaganov, ஐரோப்பா மீதான தாக்குதல் கண்டிப்பாக அமெரிக்காவை பதில் தாக்குதலுக்கு தூண்டும் என்றார். இதனிடையே, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்த புடின் திட்டமிட்டுவருவதாக கூறப்படுவதை வரவேற்றுள்ள Segey Karaganov, ஜோ பைடனையும் கடுமையாக விமர்சித்துள்ளார். பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவின் அணு ஆயுதத்தை நிலை நிறுத்துவதை வரவேற்றுள்ள அந்த நாட்டின் அதிபர் Alexander Lukashenko, ஆனால் தற்காலத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவது தொடர்பில் ரஷ்யாவின் முடிவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?