முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 906 காலம் கடந்து வெளிவரும் உன்மைகள்,

மூத்த போராளி சொன்ன விடயம் ஜெயலிதா விடுதலைப் புலிகள் பற்றி சில வேளைகளில் தவறாகக் கதைப்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் அவர் தமிழீழத்தை அடைவதற்கு கடுமையாக உழைக்கின்றார் என்பதை நாம் மறந்து விட முடியாது?
கனடாவின் இனப்படுகொலை தீர்மானத்திற்கு ஜெயலலிதாவும் காரணமா..! "இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வெளியிட்ட அறிக்கையானது வலியால் துவண்டு போயுள்ள தமிழ் மக்களுக்கு ஆறுதலை தருகின்ற விடயமாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணமாக ஜெயலலிதா இருக்கின்றார், குறிப்பாக இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு பாரிய அழுத்தங்களை கொடுத்திருந்தார்." இவ்வாறு, ஈழத்து கலைஞர் தீபச்செல்வன் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் திட்டம் கனடாவின் இனப்படுகொலை தீர்மானத்திற்கு ஜெயலலிதாவும் காரணமா..! | Tamil Genocide Canada Report Jayalalitha S Action தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "2009 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நிறைவு பெற்றதன் பின்னர் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது, அதாவது இனிமேல் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து நாங்கள் எதையும் செய்ய முடியாது, இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களையும், படுகொலைகளையும் மறந்து அவர்களோடு இணைந்து வாழ்வது தான் உத்தமமானது.அதை மீறி செயற்பட்டால் அது எங்களை அழிக்கும். இப்படி ஒரு கருத்தை சொல்லக்கூடிய தரப்பு இலங்கை, இந்திய உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர், புலம்பெயர் தேசங்கள் மற்றும் தமிழ் நாட்டில் இலங்கை அரசிற்கு ஆதரவாக சிலர் மாறியிருந்தார்கள். அந்த நேரத்தில் தமிழக தலைவர்கள் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களை வழங்கி இருந்தார்கள், குறிப்பாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, சர்வதேச அரங்கில் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், இந்திய அரசு முதலில் இனப்படுகொலை தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் போன்ற அழுத்தங்களை வழங்கி இருந்தார்கள். அதேசமயத்தில் இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்கள் நகைச்சுவையாக பார்த்தார்கள், இவர்களால் என்ன செய்ய முடியும் எனக் கேட்டார்கள். ஒட்டுமொத்த குரல் கனடாவின் இனப்படுகொலை தீர்மானத்திற்கு ஜெயலலிதாவும் காரணமா..! | Tamil Genocide Canada Report Jayalalitha S Action இதை எல்லாம் தாண்டி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் முதன்முறையாக தமிழக சட்டமன்றத்தில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை 2014 ஆம் ஆண்டு கொண்டு வந்தார். இதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக ஜெயலலிதா இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார், இலங்கையுடன் இந்திய பொருளாதார உறவு கொள்ளக்கூடாது, இந்திய அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் இந்திய சர்வதேசத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்திருந்தார். இப்படியாக ஜெயலலிதா முன்வைத்த பல கோரிக்கைகள் தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த குரலாக அறிவிக்கப்பட்டது. இப்படியான நகர்வுகளுக்கு பின்னரே வட மாகாணத்தில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என கனடா ஏற்றுக்கொண்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் முதன்மை காரணமாக அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள் தான். புலம்பெயர் தேசம் முழுவதும் இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் பிரேரணைகள் முன்வைக்கப்படுவதற்கும், அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதற்கும் பிரதான காரணமாக ஜெயலலிதா இருக்கின்றார்." என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?