முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 902 இழக்கக்கூடதே ஒருதரை இழந்து பரிதவிக்கும் தமிழர்கள்?

எங்கே பிரபாகரன்.. அவர் இருந்திருந்தால்..!
யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆயுதப் போராட்டம் தான் ஈழ மக்களின் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்தது எனப் பேசியவர்கள், அது கைவிடப்பட்டு பதின்நான்கு ஆண்டுகள் ஆன பின்பும் அதே நிலை நீடிப்பது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார்கள். கேட்டால் இந்தியா பார்த்துக்கொள்ளும் என சப்பை கட்டு கட்டுகின்றார்கள். யுத்த காலத்தில் இருந்ததைவிட, கடும் அடக்குமுறைகளுக்கு ஆளாகிவருகிறார்கள் ஈழ மக்கள். நிலங்கள் பறிக்கப்படுகின்றன. கோயிலுக்குள் புத்த விகாரைகள் முளைக்கின்றன. பலர் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். பதவிகளில் இருக்கும் அரசியல் வாதிகள் மீதே காவல்துறையினர் கை வைக்கின்றார்கள். இந்த சூழலில் தான், 'எங்கே பிரபாகரன்..., பிரபாகரன் ஆட்சிக் காலத்தில்...., அவர் இருந்திருந்தால்'' என்னும் சாமான்ய மக்களின் குரல்கள் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றன. அத்தனைக்கும் பிரதான காரணம் எங்கே பிரபாகரன்.. அவர் இருந்திருந்தால்..! | Ltte Leader Prabhakaran India Tamil Eelam இப்படியிருக்க, நாம் பலமோடு இருந்த காலத்திலேயே நமது உரிமைகளைக் கொடுக்காதவர்கள், இப்போதா கொடுக்கப்போகிறார்கள் என மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.. அது மட்டுமல்ல, ''தமிழீழ விடுதலை புலிகள் வலிமையாக இருந்த காலத்தில் எந்த நாட்டின் அச்சுறுத்தலும் இல்லை. குறிப்பாக, கொடிகட்டிப் பறக்கும் சீனாவின் ஆதிக்கம், ஆழ வேரூன்ற சந்தர்ப்பம் தேடி திரியும் அமெரிக்கா என சகல பக்கங்களாலும் இலங்கையை கூறு போடும் எதுவித செயற்பாடுகளும் பிரபாகரன் காலத்தில் இல்லை. ஆனால் எப்போது போர் வெற்றி வீரர்களாக தம்மை தாமே வர்ணித்து கொண்டவர்கள் ஆட்சிப்பீடம் ஏறினார்களோ அப்போதிலிருந்தே இலங்கையை துண்டுபோட வல்லரசுகள் தயாராகிவிட்டன இது இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆக, மீட்பராக...காப்பாராக இருந்த ஒருவரை ஈழ மண் இழந்ததன் விளைவே இன்று அரங்கேறும் அத்தனைக்கும் பிரதான காரணமாக இருக்கிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?