முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 940 மனிதர்கள் விரும்பி வாழும் நாடுகளும் மாநிலங்களும்,

வாழ்வதற்கு உகந்த நகரங்கள் 2023: மெல்பன், சிட்னி மீண்டும் முன்னிலை!
2023 ஆம் ஆண்டிற்கான உலகின் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் தரவரிசையில் நான்கு ஆஸ்திரேலிய நகரங்கள் முன்னணியில் உள்ளன. A composite image of Flinders Street Station in Melbourne (left), and the Sydney Opera House. Four Australian cities have rebounded from the pandemic years, making it into the top four most liveable cities. Source: SBS The Economist Intelligence Unit (EIU) 2023ம் ஆண்டுக்கான most liveable cities index-தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் கடந்த ஆண்டைப்போலவே இம்முறையும் முதலிடத்தை ஆஸ்திரியாவின் வியன்னாவும், இரண்டாம் இடத்தை டென்மார்க்கின் Copenhagen-உம், மூன்றாமிடத்தை சுவிட்சர்லாந்தின் Zurich நகரமும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பல இடங்கள் முன்னேறிய மெல்பன் நகரம் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தையும், சிட்னி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. Advertisement கடுமையான மற்றும் நீடித்த கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு மெல்பன் பத்தாவது இடத்திலும் சிட்னி 13வது இடத்திலும் இருந்தது. கனடாவின் மூன்று நகரங்கள், சுவிட்சர்லாந்தின் இரண்டு நகரங்கள் Osaka மற்றும் Auckland ஆகியவை முதல் பத்து இடங்களில் உள்ளன. 173 நகரங்களை மதிப்பாய்வு செய்த The Economist Intelligence Unit நிலையானதன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற காரணிகளை மதிப்பீடு செய்தது. A graph depicting the top 10 most liveable cities globally according to a survey by the Economist Intelligence Unit. A graph depicting the top 10 most liveable cities globally in 2023, according to a survey by the Economist Intelligence Unit. Source: SBS கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இப்பட்டியலில் பெர்த் நகரம் 21 இடங்கள் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்தது. அடிலெய்ட் 19 இடங்கள் முன்னேறி சமமாக 12வது இடத்தைப் பிடித்தது. பிரிஸ்பேன் 27வது இடத்திலிருந்து முன்னேறி 16வது இடத்தைப் பிடித்தது. உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்பன் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டு, அதன் பின்னர் பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை உலகில் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற அல்லது மோசமான நகரமாக சிரியாவின் டமஸ்கஸ் நகரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இது தவிர நைஜீரியாவின் லாகோஸ், லிபியாவின் திரிப்போலி, பங்களாதேஷின் டாக்கா, பப்புவா நியூகினியின் போர்ட் மோஸ்பி ஆகிய நகரங்களும் இத்தரப்படுத்தலில் கடைசி 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?