முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b945

நாளை இலங்கைக்கும் இந்த நிலைமை வரலாம்? இரட்டை வேடம் போட்ட உக்ரைன்
இலங்கையில் விடுதலைப் புலிகள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பயிற்சி அளித்தது, இதேவேளை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கையின் போர் விமானங்களை அதே விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராக உக்ரைன் விமான படையினரே செயல்படுத்தினர் என இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் தேசிய இனத்துக்கும் ரஷ்ய மொழி பேசும் ரஷ்ய தேசிய இனத்தினருக்குமான நீண்ட கால மோதல் இப்போது நாடுபிடி யுத்தமாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதையும் தேசிய இனப்பிரச்சனையையும் முன்வைத்து உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது. உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தை தொடர்ந்து பல லட்சம் உக்ரைனிய மக்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளை நம்பியிருந்த உக்ரைன் இப்போது நட்டாற்றில் விடப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவின் கோரப்பிடிக்குள் சிக்கி உக்ரைன் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது. இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல லட்சம் பேரை கொன்று அழிக்க காரணமாக இருந்த கொத்து குண்டுகள் - பாஸ்பரஸ் குண்டுகளை கொடுத்ததே உக்ரைன் என்கிற ஒருவாதத்தை முன்வைத்து ரஷ்யாவின் படையெடுப்பை நியாயப்படுத்துகிற குரல்கள் கேட்கின்றன. இது தொடர்பாக ஈழத் தமிழ் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, உக்ரைன் தொடர்பாக இருவித கருத்துகளை நம்மிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இன்றைக்கும் உயிருடன் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவரது ஏற்பாட்டில் அந்த இயக்கத்துக்கு உக்ரைன் ராணுவம் பயிற்சி அளித்தது, இதேவேளை, உக்ரைன் ராணுவத்தின் பெண்கள் படையணி பயிற்சி வழங்கி இருக்கிறது. இதற்கு பெருந்தொகையான பணத்தையும் உக்ரைன் அரசுக்கு விடுதலைப் புலிகள் வழங்கினர் என அந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றன.
இதனை மோப்பம் பிடித்த இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் அளித்த பணத்தைவிட கூடுதலாக தந்து 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் போர் விமானங்களை இயக்க உக்ரைன் விமானப் படையினரை வரவழைத்தது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். உக்ரைன் தேசிய இனப் பிரச்சனையில் சிக்கி இருப்பதாக கூறப்பட்டாலும் அமெரிக்காவை நம்பி பக்கத்து தேசத்து பெரியண்ணன் ரஷ்யாவை பகைத்துக் கொண்டு இப்போது நாட்டையே பறிகொடுக்க வேண்டிய பரிதாபத்தில் உக்ரைன் இருக்கிறது. இதேபோன்ற நிலைமைதான் நாளை இலங்கைக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை என ஈழப் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?