முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b873

இந்தியாவில் துயரம் - திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கிணற்றுக்குள் வீழ்ந்ததில் 13 பேர் மரணம்
இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள, குஷிநகர் பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சிறுமிகள், பெண்கள் உட்பட 13 பேர் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர், நெபுவா நவுராங்கியா பிரதேசத்தில் நேற்றிரவு 8.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் 7 பெண்களும், ஒரு வயது குழந்தை மற்றும் 10 வயது சிறுமியொருவர் உட்பட 6 சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்படி திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், அங்கிருந்த கிணற்றின் மேல் இடப்பட்டிருந்த கொங்ரீட் தளத்தின் மீது நின்றுகொண்டிருந்த போது, பாரம் தாங்க முடியாமல் அது உடைந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கிணற்றுக்குள் வீழ்ந்த 13 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் ஏற்பட்ட விபத்தை அறிந்து மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?