முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b870

தமிழர் பகுதிக்கு குழிக்க வரதங்கோ பேர் இரச்சலோடு சொன்ன கடல்
கடலில் குளிக்கச் சென்றவர்களுக்கு நிகழ்ந்த வீபரிதம்! இருவர் மீட்பு - ஒருவர் மாயம் (Photos) திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் குளிக்கச் சென்று 3 பேர் காணாமல் போயிருந்த நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலர் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு திருகோணமலை நிலாவெளி கடற்கரைக்கு சென்றிந்த நிலையில் நேற்று (16) பிற்பகல் 1.30 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது பாரிய அலையொன்று அடித்துச் சென்றதில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காணாமல் போனவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சுற்றுலா வந்தவர்களில் 13 பேர் கடலில் நீராட சென்றதாகவும் அவர்களில் நுவரெலியா, தலவாக்கலையைச் சேர்ந்த செல்வன் சமல் (வயது 21) மற்றும் தேஹிககொட்டுவ, நாளந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரியங்கர பண்டார (வயது 28) மற்றும் பட்டியமுல்ல,தம்பகஹவெல, தலாத்துஓயா பிரதேசத்தைச் சேர்ந்த (வயது 21) மூவருமே காணாமல் போயுள்ள நிலையில் உப்புவெளி பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டியமுல்ல,தம்பகஹவெல, சதலாத்துஓயா பிரதேசத்தைச் சேர்ந்த (வயது 21) நபர் இதுவரை மீட்கப்படாத நிலையில் குறித்த நபரை தேடும் பணியில் உப்புவெளி பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த கடற்கரையில் கடல் சற்று கொந்தழிப்பான நிலை காணப்பட்ட போதிலும் கடலில் குறித்த தூரத்திற்கு மேலாக செல்ல வேண்டாம் என சிவப்பு கொடி நடப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நிலாவெளி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதையும் பொருட்படுத்தாது நடந்து கொள்வதனால் இவ்வாறான அர்த்தங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?