முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b913

இனி உலக அரங்கில் ரஷ்ய அதிபர் புதின் தனிமைப்படுத்தப்படுவர்! ஜோ பைடன்
உக்ரைன் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்யா மற்றும் அதிபர் விளாதிமிர் புதின் (Vladimir Putin), இனி உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட ரஷ்யா, தலைநகர் கீவுக்குள் நுழைந்து பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகளை வீசியதுடன் பல நகரங்களில் உக்ரைனிய இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளை விவரித்தார். அப்போது அவர் ரஷ்யாவின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். அதன் விவரம், ரஷ்யா திட்டமிட்ட உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. ரஷ்ய ராணுவம் ஆத்திரமூட்டல் அல்லாமல் நேரடியாகவே யுக்ரேன் மீது கொடூர தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் திடீரென நடந்ததாக தோன்றவில்லை. இது பல மாதங்களாக நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. 1,75,00 துருப்புக்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை யுக்ரேனின் எல்லைகளுக்கு அருகே நகர்த்திய புதின் முன்னேற்பாடகவே ரத்த வங்கி போன்ற அமைப்புகளையும் அங்கே நிறுவியிருக்கிறார். போருக்கு தயாராகும் நிலைமை போல அங்கே கள மருத்துவ முகாம்களையும் நிறுவினார். இதை எல்லாம் பார்க்கும்போது ரஷ்ய அதிபரின் நோக்கம் தெளிவானது. "ஆதாரமற்ற கூற்றுகள்" மற்றும் ஆத்திரமூட்டல் முயற்சிகளுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் திட்டங்கள் பெரும்பாலும் அமெரிக்காவால் முன்பே கணிக்கப்பட்டது. ரஷ்யாவின் சாத்தியமிகு தாக்குதல் பற்றி அமெரிக்கா பல பல வாரங்களுக்கு முன்பே எச்சரிக்கைகளை விடுத்தது. தாக்குதலை தொடங்குவதற்கான ரஷ்ய அரசாங்க முயற்சிகளுக்கு முன்பாக, கிழக்கு யுக்ரேனில் உள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைகள் மீது சைபர் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது. சர்வதேச சட்டத்தை "அப்பட்டமாக" மீறும் வகையில் ரஷ்யா ஈடுபட்டிருக்கிறது என்று ஜோ பைடன் (Joe Biden) குற்றம்சாட்டினார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?