முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b888

தான் செய்த தவறுகளை ஒத்துக் கொள்ள விரும்பாதவன் தவறுகள் செய்வதில் இருந்து விடுபட மாட்டான்
எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி? ஐ.நா அமர்வு தொடர்பில் சரத்வீரசேகர கேள்வி எமது படைவீரர்களுக்கு எதிராக போலியான போர்க்குற்றச்சாட்டுக்கள் சமத்தப்படுகின்றன.எங்களுக்கு மட்டும் என் இப்படி செய்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர விசனம் வெளியிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் போது நாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுத்தோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது தவறானது. இவை அனைத்தும் ஐ நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையிலிருந்தே ஆரம்பமாகின. இந்த அறிக்கை எங்களிற்கு எதிராக 8 யுத்த குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் ,சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியமை தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நான் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு தனியாக சென்று அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தேன். உதாரணத்திற்கு யுத்தத்தின் போது நாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுத்தோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது தவறானது. நான் அவ்வேளை கடற்படையிலிருந்தேன் வடபகுதிக்கு உதவிப்பொருட்களுடன் நூற்றுக்கணக்கான கப்பல்கள் சென்றன. ஐ நா உட்பட சர்வதேச சமூகம் இலங்கையை இதற்காக பாராட்டின. முல்லைத்தீவு அரசாங்க அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் ஒருமுறை மூன்று மாதங்களிற்கு தேவையான உணவுப்பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார். இப்படியிருந்த போதிலும் மங்களசமரவீர யுத்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். பரணகம ஆணைக்குழுவுடன் ஆறு சர்வதேச அளவில் பெயர் பெற்ற யுத்த குற்ற நிபுணர்கள் இணைந்து செயற்பட்டனர், அவர்கள் அனைவரும் நாங்கள் எந்த யுத்த குற்றங்களையும் இழைக்கவில்லை என உறுதியாக தெரிவித்தனர், அப்படியான சூழ்நிலையில் ஏன் சில நாடுகள் எங்கள் யுத்த வெற்றி வீரர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. அமைச்சர் ஜிஎல்பீரிஸ் சிறப்பாக செயற்படுகின்றார், பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுபவர்களை காப்பாற்ற சட்டங்களை தேவைப்பட்டால் திருத்துவேன் என தெரோசா மே தெரிவித்தார். அவர் அவ்வளவு தூரம் சென்றார் ஆனால் ஏன் எங்களிற்கு இதனை செய்கின்றனர். இவை அனைத்தும் போலியான பிழையான திட்டங்கள் நாங்கள் இவற்றை சவாலிற்கு உட்படுத்தவேண்டும் என தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?