முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b886

துரோகி ஆபத்தானவன் என்றெ தலைவனின்வரிகளிற்கு அமைய இந்த நாய்யின் சொல்லை கேழுங்கள் .
விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் புதுப்புரளியை ஏற்படுத்திய டக்ளஸ் பிரபாகரன் மற்றவர்களுக்கு சயனைட் கொடுத்த பின்னர் தான் சரணடைந்தே இறந்தார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். நேற்றய தினம் சனிக்கிழமை பனை தென்னை கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தாணியை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பிரபாகரன் இறந்ததற்காக நான் வேதனையடைகிறேன். ஏனென்றால் அவன் மற்றவர்களுக்கு சயனட்டை கொடுத்து சாகடித்துவிட்டு, தான் சரணடைந்து இறந்துவிட்டார். பிரபாகரன் எத்தனையோ தடவை என்னை கொல்வதற்கு முயற்சித்தார். அவனால் அது முடியாது போனது. நான் அப்பவே வெளிப்படையாக சொன்னான் எங்களுடைய மக்களது பிரச்சினைகளை தீர்க்க முன்னர் என்னை யாராலும் கொல்ல முடியாது என்று. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக 13வது திருத்தச்சட்டம் ஆரம்ப புள்ளியாக இருக்கும் என நான் அன்றிலிருந்தே கூறி வருகிறேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துங்கள் என இந்தியாவை கோருகிறது. மாகாணசபையில் ஒன்றுமில்லை என்று அவர்கள் டக்ளஸ் தேவானந்தா மாகாணசபையை கைப்பற்றி விடுவார் தமிழ் மக்களுக்கு முடிந்தவரை அபிவிருத்திகளை ஏற்படுத்தி விடுவார் எ ன்பதற்காக உசுப்பேத்து அரசியல் மூலம் மாகாணசபையை தம் வசம் ஆக்கினார். நான் மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற நோக்குடனேயே செயல்பட்டு வருகிறேன் தவிர பொய்யான வாக்குறுதிகளை என்னால் வழங்க முடியாது. ஆகவே நான் பிரபாகரனை பழிவாங்க முயற்சிக்கவில்லை. எனது ஒரு கண்ணை பிரபாகரன் எடுத்துவிட்டார். இன்று இந்த மக்களை மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளியவர் பிரபாகரன். என்னுடைய நெருக்கமான உறவுகளை காணாமல் ஆக்கியவர். ஆகையால் என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் தலைவரின் நிலை தொடர்பில் எதுவுமே ஆதாதரங்களுடன் யாரும் உறுதிப்படுத்தாத நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கூற்று இவ்வாறு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?