கிளிநொச்சி வைத்திய அதிகாரி பிரியந்தினி இடத்திற்கு மேலுமொருவர் திடீர் நியமனம்!
கிளிநொச்சி கண்டாவளை பகுதிக்கு வைத்தியர் பிரியந்தினி மேலதிகமாக மேலுமொருவர் திடீரென நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி வைத்தியர் பிரியந்தினி புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வைத்தியர் பிரியந்தினி குறித்த பகுதியில் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாக தொடர்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கவனித்து வந்தார்.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களை குறிவைத்த மருத்துவ மாபியாக்களை மருத்துவர் பிரியந்தினி வெளிப்படுத்திய நிலையில், பொதுஜன பெரமுனவின் பிரதேசசபை வேட்பாளரான கோபால் என்பவர் தொலைபேசியில் அவரை மிரட்டியதை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைத்தியர் பிரியந்தினி கவனம் பெற்றார்.
அத்துடன், சிறிதரன் எம்.பியுடனான தொலைபேசி உரையாடல் வெளியான விவகாரத்திலும், அவர் மீது நடவடிக்கையெடுக்க கோரி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , வைத்தியர் பிரியந்தினி, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வேவு பார்க்க எனது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கவென இன்னொரு MOH ஐ அனுப்பினாலும், எனது சேவை கண்டாவளை பிரதேசத்து மக்களுக்கு தங்கு தடையின்றி தொடரும் என மருத்துவர் பிரியந்தினி தனது முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்