முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b862

ஜெனிவா களத்தில் மீண்டும் அமெரிக்கா -இலங்கைக்கு புதிய தூதுவர் விடுத்துள்ள தகவல்
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சங்(Julie Sung), இலங்கையில் தனது முன்னுரிமைக்குரிய விடயங்கள் எவை என்பதை தெரிவித்துள்ளார். இதன்படி மனிதஉரிமைகளும் பொறுப்புக்கூறலும் தனது முன்னுரிமைக்குரிய விடயங்களாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களுடனான மெய்நிகர் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவை தளமாக கொண்ட ஸ்ரீலங்கா பவுண்டேசனின் உதவியுடன் அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் இந்த மெய்நிகர் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டனர். கடந்த11ம்திகதி இடம்பெற்ற இந்த மெய்நிகர் சந்திப்பினை அமெரிக்க இரஜாங்க திணைக்களமும் இலங்கைக்கான புதிய தூதுவரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது இரு நாடுகளிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள புதிய தூதுவர், தனது பதவிக்காலத்தில் கொழும்பில் இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றும் போது மனித உரிமைகள் சமூகங்களிற்கு இடையில் நல்லிணக்கம் மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறுதல் ஆகிய விடயங்களே தனது முன்னுரிமைக்குரிய விடயங்களாக காணப்படும் என தெரிவித்துள்ளார். இருநாடுகளிற்கும் இடையிலான பரந்துபட்ட கூட்டுறவை உருவாக்கும் விவகாரங்கள் இவை என புதிய தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜெனீவா மனித உரிமை பேரவையில் மீண்டும் இணைந்துகொண்டுள்ளது என்பதை நினைவுபடுத்தியுள்ள அவர் எதிர்வரும் அமர்வில் இலங்கை நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் உறுதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?