அணுவாயுத தாக்குதல் நடத்தப்படும் - புடின் விடுத்த எச்சரிக்கை
உலக நாடுகளின் கடும் அழுத்தங்களையும் மீறி உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தம் நான்காவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளது.
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக முன்னேறி வரும் ரஷ்ய படைகளுக்கு பதில் தாக்குதலை உக்ரைன் படைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பல ஐரோப்பிய நாடுகள் இராணுவ உதவி வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன. இன்றையதினம் சில நாடுகளின் ஆயுத தளபாடங்கள் உக்ரைன் எல்லையை தாண்டியுள்ளன.
இந்நிலையில் தமது இராணுவ நடவடிக்கைக்கு எந்தவொரு நாடும் இடையூறு செய்தால் அணுவாயு தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மீது அணு ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், உலக நாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அணு ஆயுதம் தொடர்பான எச்சரிக்கையை ரஷ்ய அரச தலைவர் புடின் விடுத்திருந்தார். உலகின் மிக வலிமையான அணு ஆயுதங்கள் உள்ள நாடாக, ரஷ்யா விளங்குகிறது. அதுமட்டுமன்றி, ஏராளமான அதிநவீன போர் ஆயுதங்களும் ரஷ்யாவிடம் உள்ளதென ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இதனால் ரஷ்யாவை யார் தாக்கினாலும், அவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பின் உலக தலைவர் ஒருவர், தன்னிடம் அணு ஆயுதங்கள் உள்ளதை பகிரங்கமாக தெரிவித்து எச்சரித்துள்ளார்.
இது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்