முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b79

 யாழ் பல்கலைகழக பேராசிரியருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் திருப்பம்




யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பேராசிரியர் மீதான சுயாதீன விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக இன்று (7) கூடவிருந்த பல்கலைகழக பேரவையின் சிறப்பு அமர்வை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.


பல்கலைகழகத்தினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இரண்டு நீதிபதிகளை கொண்ட குழுவின் விசாரணைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இன்று கூட்டப்படவிருந்த விசேட பேரவை கூட்டமே இடைநிறுத்தப்பட்டது.


தான் கலந்து கொள்ளாத விசாரணை அமர்வில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று பேராசிரியரால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர்கள் மூவர், பதிவாளர், விசாரணைக்குழுவின் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள், பேரவை உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.


இந்த மனுவை ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றம், வழக்கின் அடுத்த தவணை வரையில் பேராசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்து அறிக்கையிடுவதையும் அதற்கான பேரவை அமர்வை இடைநிறுத்துமாறும் பேரவையின் செயலாளருக்கு நேற்று மாலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தொலைநகல் மூலம் அறிவிக்கப்பட்டது.

 

பின்னணி யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒருவரிற்கு எதிராக மாணவிகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அவர் பல்கலைகழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.


எனினும், தன் மீதான குற்றச்சாட்டுக்களை பேராசிரியர் மறுத்தார். இதேவேளை, தன்னை மீளவும் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கடமையில் இணைக்க வேண்டுமென பேராசிரியர் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், முன்னைய அறிக்கை நீண்டகாலத்திற்கு முன்னர் தயாரிக்கப்பட்டிருந்ததால், புதிய விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பல்கலைகழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இதன்படி ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி பரமராஜா, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அரியநாயகம் ஆகியோரை கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, மீள்விசாரணை நடந்தது.


இதேவேளை, பேராசிரியர் இடைநிறுத்தப்பட்டிருந்த பல வருடங்களாக அவருக்கு பல்கலைகழகம் ஊடாக பெரும் தொகை பணம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அவரை இடைநிறுத்திய பல்கலைக்கழகம், மறுபுறம், ஊதியத்தை வழங்கி வருகிறது.


பல்கலைகழகத்தின் இந்த இரட்டை நிலைப்பாட்டையும் பேரவை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி, தெளிவான முடிவொன்றை எட்டுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.


ஒன்றில், கடமையில் இல்லாத பேராசிரியருக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும், அல்லது அவரது நிபுணத்துவத்தை முறையான ஏற்பாடுகளுடன் பயன்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைகழக பேரவையில் வலியுறுத்தி வந்தனர். இத்தகைய பின்னணியில், புதிய விசாரணைகள் நடந்தன.


முன்னர் பேராசிரியருக்கு எதிராக சாட்சியமளித்த பல மாணவிகள் குடும்ப வாழ்க்கையில் இணைந்தமை உள்ளிட்ட காரணங்களினால் பலர் மீள் விசாரணையில் சாட்சியமளிக்கவில்லை.


எனினும், சுமார் 4 இற்கும் குறையாத முன்னாள் மாணவிகள் புதிய விசாரணையில் பேராசிரியருக்கு எதிராக சாட்சியமளித்தனர். இந்த விசாரணைகள் முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

 

இந்த அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவிருந்தது. இதற்காக இன்று விசேட பேரவை கூட்டம் கூட்டப்படவிருந்த நிலையில், நேற்று ரிட் மனு தாக்கல் செய்து, அதனை இடைநிறுத்தியுள்ளார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?