பசிலின் அமெரிக்கா பயணம் இலங்கை அமெரிக்க முறன்பாட்டை முடிவிற்கு கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளது
திருகோணமலை துறைமுகம் உட்பட சுமார் 35 ஏக்கர் நிலம் எண்ணை சுத்திகரிப்பு என்ற போர்வையில் 5 வருடக் குத்தகை என்ற வெளித் தோற்றத்தில். நிரந்தரமாக அமெரிக்காவிற்கு வளங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் தமிழர்களின் இன அழிப்பு என்றோ தமிழர்களின் தாயகம் என்றோ பேசுவதற்கு எவரும் இருக்க மாட்டார்கள் என புத்தி ஜீவிகள் கணித்துள்ளனர்.
எதிர்காலத்தில் தமிழர்களின் பிரச்சனை சீனாவின்கையில் இருப்பதாகவும் சீனா எவளவுதூரம் இந்தியாவை தாக்குகின்றெதோ அக்காலவரையறைக்குள் தமிழர்களின் தாயகக் கனவு உயிர்ப்போடுயிருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட நேரம் பேசப்பட்டது எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் பங்கேற்றிருந்தார்
. தமிழ் தலைவர்களின் அறிவு எப்படிப்பட்டது என்ன எதிர்பார்ப்பு என்ற நிலைபாட்டை அறிவதற்கான புலநாய்வுச் சந்திப்பாகவே இதை தமிழ் புத்திஜீவிகள் கருதுகின்றார்கள்.
கருத்துகள்