முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b147

 வெலிக்கடை சிறை படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவு இன்று


1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலைகளின் ஒரு முக்கிய படுகொலை சம்பவமாக பதிவாகிய வெலிக்கடை சிறை படுகொலைகளின் 38 ஆம் ஆண்டு நினைவு இன்றாகும்.


53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட இந்த வெலிக்கடை சிறை படுகொலைகளின் நினைவு கூரல் நிகழ்வுகள் தாயகம் மற்றும் புகலிட நாடுகளில் இடம்பெற்று வருகின்றது.


சிறை அதிகாரிகளின் பங்களிப்புடன் தமிழ் அரசியல் கைதிகள் மீதான தமது படுகொலை திட்டத்தின் ஒரு கட்டமாக வெலிக்கடை படுகொலைகள் கறுப்பு யூலை காலகட்டத்தில் இடம்பெற்றிருந்தன.


அன்றைய நாளில் கோடாலி, கத்தி, அலவாங்கு சுத்தியல், இரும்பிக் கம்பிகளால் கொடுரமாக தமிழ் கைதிகள் தாக்கிகொல்லப்பட்டிருந்தனர்; 25 ஆந் திகதி 2 மணி முதல் மாலை ஐந்து மணியளவில் முதற் கட்டப் படுகொலைகள் இடம்பெற்றிருந்தன.


அதில் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த குட்டிமணி, தங்கதுரை ஜெகன் ஆகியோர் உட்பட மொத்தம் 29 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.


குட்டிமணி மற்றும் ஜெகன் ஆகியோரின் கண்கள் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெக்கப்பட்டு அவரகளது உடல்கள் குத்திக் கிழிக்கப்பட்டு உறுப்புகள் வெட்டப்பட்டிருந்தன. இரண்டாம் கட்ட படுகொலையில் 18 தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.


வெலிக்கடையில் கொல்லப்பட்ட 53 அரசியல் கைதிகளின் உடலங்கள் அவரசரகால சட்டத்தின் கீழ்; மரண விசாரணைகளின்றி தகனம் செய்யப்பட்டன.


இந்த படுகொலைகளுடன் தொடர்புடைய சிங்கள கைதிகளுக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தககது.


இதற்கிடையே ரெலோ அமைப்பினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்ட வெலிக்கடை படுகொலைகள் பதாகைகள் கிழித்து எறியப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்வுகள் தொடர்பான கண்காணிக்கும் நடவடிக்கையும் பாதுகாப்பு தரப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?