முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b85

 இலங்கைக்குள் இன்னொரு யுத்தமா? பலப்படுத்தப்படும் இராணுவம்!!


 


 

இலங்கையில் சகல துறைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதைப்போல நாட்டின் உயர்கல்வியும் இன்று இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.


நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றது.


இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இலங்கையில் 30 வருப் போர் இடம்பெற்றமைக்கும் உயர்கல்வியில் ஏற்பட்ட நிராகரிப்புக்களே காரணம் எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,


இலங்கையில் 1970களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட காரணம் இந்தக் கல்வி முறையில் ஏற்பட்ட நிராகரிப்பாகும். 1948 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் கூட கல்வித்துறையில் ஏற்பட்ட தலையீடுகள் காரணமாகவே எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 

சிறிமாவோ பண்டாரநாயக காலத்தில் கல்வித்துறையில் தமிழ் மாணவர்களுக்கு அநியாயம் இடம்பெறுவதாக தெரிந்துகொண்டு அதனை எதிர்த்து ஆயுதம் ஏந்த நிர்பந்திக்கப்பட்டனர் என்பது இன்று பலருக்கு தெரியாது போயுள்ளது.


கல்வி என்பது ஒரு நாட்டின் முக்கியமான துறையாகும். இது சகலரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாகும். அவ்வாறு இருக்கையில் சகல துறைகளிலும் இன்று இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது. கொவிட் கட்டுப்பாட்டு நிலைமைகளாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு அமைச்சும் இராணுவத்தின் மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றது.


விவசாயத்திலும் அவர்கள் கை வைத்துள்ளனர். இந்த நிலை இன்று உயர் கல்வியிலும் கை வைக்கும் நிலை உருவாகியுள்ளது. இன்று கொண்டுவந்துள்ள சட்டமூலம், உயர் கல்வி அமைச்சிற்கு கீழ் வரவில்லை, மாறாக பாதுகாப்பு அமைச்சருக்கு கீழேயே கொண்டுவரப்படுகின்றது.


எனினும் தேரர்களுக்கு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் கூட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கீழ் உள்ளதென்றால் இராணுவ பல்கலைக்கழகமும் அவ்வாறே கொண்டுவரப்பட வேண்டும்.


அதேபோல் இராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பி.எச்.டி பட்டதாரிகளாக மாற்றியமைக்கவா இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


இன்று முன்னெடுக்கும் இராணுவ மயமாக்களில் உயர் இராணுவ அதிகாரிகளை முனைவர் பட்டம் கொடுத்து ஏனையவர்களை மட்டந்தட்டும் நடவடிக்கைகளே இடம்பெறப்போகின்றது.


தேசிய பாதுகாப்பு கொள்கைத்திட்டம் என்னவென தெரிந்துகொள்ள முடியாத நிலை எமக்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்த கொள்கை என்னவென்பது சகலரும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதும் இராணுவ கொள்கைக்கு கீழ் சிவில் மாணவர்களுக்கும் கற்பிக்கவே முயற்சிக்கப்படுகின்றது.


இறுதி யுத்தத்தின் பின்னர் இப்போது வரையில் இராணுவத்தினர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தால் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு கொடுப்பனவுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றது. இன்றுள்ள நிலையில் இலங்கைக்குள் இன்னொரு யுத்தத்தில் இராணுவம் ஈடுபட வேண்டிய தேவை வராது, எனவே சர்வதேச சவால்களுக்கே இனி நாம் முகங்கொடுக்க வேண்டும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?