முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b112

 தனுஷின் பார்வையில் விழுந்த பிரியா பவானி சங்கர்.. நெருங்க வேண்டாம் என எச்சரிக்கும் சிலர்!



தனுஷ் என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் நடிகைகள் விஷயத்தில் அவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான். இன்னைக்கும் தனுஷுடன் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமா வட்டாரங்களில் இருந்து பல அட்வைஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன.  தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளவர் தனுஷ். அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் D44 படத்தில் நடிக்க உள்ளார்.


 

இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன. அதில் தனுஷுடன் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் மாப்பிள்ளை படத்திற்கு பிறகு பத்து வருடங்கள் கழித்து தனுஷுக்கு ஜோடியாக மீண்டும் ஹன்சிகா நடிக்க உள்ளாராம்.


அதனைத் தொடர்ந்து நித்யா மேனன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தன. இதற்கிடையில் தான் மூன்றாவது கதாநாயகி யார்? என்பதில் ஏகப்பட்ட போட்டிகள் நடந்து வந்தன. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் பெயரை டிக்கடித்துள்ளாராம் தனுஷ். ஏற்கனவே ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமான பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் பல நடிகைகள் அவர் மீது பொறாமையில் இருக்கிறார்களாம்.


இது ஒருபுறமிருக்க தனுஷுடன் நடித்த நடிகைகள் பலரும் அவருடன் கிசுகிசுக்கப்படுவதுண்டு. அந்தவகையில் நீயும் தனுஷ் விஷயத்தில் மாட்டிக் கொள்ளாதே என பலரும் பிரியா பவானி சங்கர் எச்சரித்து வருகிறார்களாம். ஆனால் அவரோ, ஆனாளப்பட்ட எஸ் ஜே சூர்யாவையே பார்த்து விட்டேன், இவரையும் ஒரு கை பார்த்து விடுகிறேன் என கிளம்பி விட்டாராம்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?