அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி
அவுஸ்திரேலியா மெல்பேன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் பலியானவர் காலி மஹிந்தா கல்லூரி, மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் மாணவரான குஷான் நிரோஷன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்று மாலை 06.00 மணிக்கு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ள தாக அந்நாட்டு வைத்திய சாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.இலங்கை காலியைச் சேர்ந்த 30 வயதுடைய Kushan Niroshana என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
Kushan Niroshana விக்டோரியா மாநிலம் Ballarat பகுதியில் பொறியியலாளராக பணிபுரிந்துவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் Ballarat-இலிருந்து Colac-க்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து சம்பவித்திருப்பதாகவும், இவரது கார் பிராதான வீதியிலிருந்து விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அவசர சேவைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டபோதும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்பே இவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Kushan Niroshana அனைவருடனும் நட்புடன் பழகுபவர் என்பதுடன் உதவும் மனப்பான்மை உள்ளவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
Kushan Niroshana இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம் Civil Engineering Department-இன் Batch 12'-ஐச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள்