முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b165

 வன்முறையை பின்தொடரும் தமிழர்கள் அதை பழக்கிய சிங்களவர்கள் வேடிக்கை பார்ப்பு,


யாழில் அரச அலுவலகம் ஒன்றில் பெண் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து!


யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அதே அலுவலகத்தில் பணியாற்றும் இளம்பெண் உத்தியோகத்தரை கத்தியால் தலையிலும் முகத்திலும் குத்திவிட்டு, குளியல் அறைக்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


இச்சம்பவம் நேற்று (28) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் ஒரு தலைக் காதலினாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும் தெரியவருகிறது.


அலுவலகத்தில் வைத்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, மலசலகூடத்துக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக்கொண்டு அந்த உத்தியோகத்தர் இருந்து விட்டார்.


அலுவலக ஊழியர்கள், காயப்பட்ட பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அந்தப் பகுதியால் சிவில் உடையில் வந்த காவல் துறை  சம்பவத்தை அறிந்து, அங்கு சென்றனர்.


மலசலகூடத்தில் மறைந்திருந்தவரை வெளியில் வருமாறு அழைத்துள்ளனர். எனினும், உள்ளேயிருந்து எந்தப் பதிலும் வராததால் காவல் துறை கைத்தொலைபேசி கமரா மூலம் உள்ளே நடப்பதை படம் பிடித்த போது, உள்ளே அந்த நபர் இரத்த வெள்ளத்தில் விழுந்திருப்பது தெரிய வந்தது.


உடனே கதவை உடைத்து அவரை மீட்டு அலுவலக வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.


குறித்த நபர் கத்தியால் தனது வயிற்றை குத்திக் கிழித்துள்ளார்.


இரண்டு சம்பவங்களுக்கும் வேறு வேறு கத்திகளையே பாவித்துள்ளார்.


பின்னர் காவல் துறை  மேற்கொண்ட விசாரணையில் ஒரு தலைக் காதலால் இந்த விபரீதம் நடந்தது தெரியவந்தது.


மானிப்பாயைச் சேர்ந்த அந்தப் பெண் உத்தியோகத்தர் விவாகரத்தானவர்.


அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பருத்தித்துறை,புலோலியைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருதலையாக காதலித்துள்ளார். பெண் உத்தியோகத்தருக்கு இதனால் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.


இதனால், இரண்டு வாரங்களின் முன்னர் மானிப்பாய் காவல் துறை  நிலையத்தில் அந்தப் பெண் முறைப்பாடொன்றும் பதிவு செய்துள்ளார். மானிப்பாய் காவல் துறை இளைஞரை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


இந்த நிலையிலேயே நேற்று அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


சந்தேக நபரான இளைஞரின் மேசை லாச்சிக்குள் இருந்து இன்னும் இரண்டு கத்திகளும் ஒரு கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டன.


யாழ்ப்பாணம் குற்ற தடுப்புப் பிரிவு காவல் துறை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?