தமிழர்களை ஏற்க மறுக்கும் சீனா!! இந்தியாவிற்கு சென்றது தகவல்
தமிழர்களை சீனா இலங்கையர்களாக ஏற்க மறுக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் மனோ கணேசன் இதனை எடுத்துரைத்துள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
சீனா இலங்கையில் வந்து நிலை கொண்டிருப்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பது மட்டுமல்ல. சீனா இலங்கையின் பல்மொழி, பன்மத, பல்லின அடிப்படையை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக நாம் சந்தேகம் கொள்கிறோம்.
ஆகவே தமிழர்களை சீனா இலங்கையர்களாக ஏற்க மறுக்கின்றதா என நாம் கேட்கிறோம். ஆகவே தான், இலங்கையில் சீனா நிலைப்பெறலை தமிழர் நாம் சந்தேகமாகவே பார்க்கிறோம் என்பதையும் இந்தியா புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இதேவேளை 13ஆம் திருத்தம், 16ஆம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்