முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b168

 இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு வெளியானது


இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.


இதன்படி தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிசாலைகளிற்கு தீர்வை காண்பது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் எனவும்  இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பது குறித்த தனது பொறுப்பை இலங்கை நிறைவேற்றவேண்டும் என தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.


இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி முரளீதரன் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான தனது எழுத்துமூல பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.


பல்லின பல்மத சமூகம் என்ற இலங்கையின் குணாதிசயத்தை பேணுவதற்கான முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளித்து வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுக்குமாறும் தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறும் இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது என முரளீதரன் தெரிவித்துள்ளார்.


இலங்கை தமிழர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களும் சமத்துவம் பாதுகாப்பு ஐக்கியத்துடன் வாழக்கூடிய பல்லின பல்மத பல்மொழி சமூகம் என்ற இலங்கையின் குணாதிசயத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் மனித உரிமை மீறல் உட்பட பல கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்வில் சமத்துவம் நீதிஅமைதி மற்றும் கௌரவத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் பொறுப்பை இந்தியா வலியுறுத்தியுள்ளது என முரளீதரன் தெரிவித்துள்ளார்.


தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பது உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வில் ஈடுபடுவது இலங்கையின் ஐக்கியம் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு உதவும் என்பதையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்களிற்கு பெறுப்புக்கூறுவது உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் சாத்தியமில்லை என்பதால் இந்தியா சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் நேரடியான பதிலை வழங்கவில்லை.


இதற்கு மேலதிகமாக நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும்,தமிழ்சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறும் அனைத்து பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகள் மனித உரிமைகள் பாதுகாக்க படுவதை உறுதி செய்வதற்கான சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என முரளீதரன் தெரிவித்துள்ளார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?