முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b114

 யாழில் பாலியல் சந்தேகம் பிரிவினையை நோக்கியச் செல்லும் தமிழர்களின் திருமண உறவுகள்.



கணவரை வேவு பார்த்த வடமாகாண பெண் வைத்தியர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்



 கணவரை வேவு பார்த்த வடமாகாண பெண் வைத்தியருக்கு கணவரின் பொருட்களை தொட தடைவிதித்து நீதிமன்றம் அதிரடி உத்தவை பிறப்பித்துள்ளது. கணவர் கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில்‌ ‌ தாக்‌கல் செய்த சிறப்பு வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


அதன்படி குறித்த பெண் வைத்திய நிபுணர் ஒருவர்‌ தனது கணவரின்‌ கணினியை சட்டத்துக்குப்‌ புறம்பாகப்‌ பயன்படுத்துவதற்கும்‌ அதிலுள்ள தகவல்களைப்‌ பதிவிறக்குவதற்கும்‌ மற்றும்‌ அவரது உடமையில்‌ கண்காணிப்பு சாதனத்தை பொருத்துவதற்கும்‌ தடைவிதித்துள்ளது.



கணவர் வீட்டில்‌ இல்லாதபோது, மனைவி தனது தனிப்‌பட்ட கணினியை சட்டத்துக்குப்‌ புறம்‌பாக தவறாக அணுகியதாகவும்‌, பல்வேறு தகவல்களை பதிவிறக்கம்‌ செய்ததுடன், தனது அறையில் ஒலிப்பதிவு கண்காணிப்பு சாதனத்தை நிறுவி தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததாக கூறப்படும் அதேவேளை இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கும் அதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




கணவர் ‌ கொழும்பில்‌ உள்ள ஒரு அரச வைத்தியசாலையில்‌ வைத்தியராக பணியாற்றி வரும் நிலையில் மனைவி வட மாகாணத்தில்‌ உள்ள ஒரு அரச வைத்தியசாலையில், வைத்திய நிபுணராக பணியாற்றுகிறார்.


தனது அனுமதியின்றி தனது வட்ஸ்‌அப்‌ கணக்கில்‌ உள்ள மின்னணு தகவல்‌ தொடர்புகளை அணுக தனது கணினியை பயன்படுத்த முயற்சித்தது, . மூடப்பட்டிருக்கும் போது அறைக்குள் நுழைவதன் மூலமும், முடக்கப்பட்ட கணினிக்குள் நுழைவதன் மூலமும் வாதியின் தனியுரிமை குறித்த நியாயமான எதிர்பார்ப்பு மீறப்பட்டதாகவும், நம்பிக்கை மீறல் இருப்பதாகவும் கணவர் குற்றம் சாட்டினார். அதோடு விவகாரத்து கோரும் மனைவி, தனக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.


இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கல்கிசை நீதிமன்ற மேலதிக மாவட்ட நீதிபதி, வழக்காளியின்‌ உடமையில்‌ உள்ள தரவுகள்‌, ஆவணங்கள்‌ மற்றும்‌ குறுஞ்செய்திகளை எதிராளி சேகரிப்ப தைத்‌ தடுக்கும்‌ கட்டளையை கடந்த 6ஆம்‌ திகதி வழங்கினார்‌.


அத்துடன், சட்டத்தரணிகள் உள்ளிட்ட மூன்றாம் தரப்பினரிடம் அந்த தகவல்களை பகிர்வதோ, பரப்புவதோ கூடாதென்றும் கட்டளை பிறப்பித்தார். மேலும் , வாதியின் அசையும், அசையா சொத்துக்களில் கண்காணிப்பு சாதனங்களை பொருத்துவதற்கும் தடை விதித்ததுடன் ஜூலை 15ஆம் திகதி வரை இந்த கட்டளை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?