காகத்திற்கு கனவிலும் பீ தின்னும் எண்ணம் என்ற தமிழ் பழமொழிக்கு அமைவாகச் செயல்படும் சிங்கள முட்டாள்கள்.
விடுதலைப்புலிகளை ஊக்குவிக்க முயற்சி! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கைது
தமிழீழ விடுதலைப்புலிகளை ஊக்குவித்த சந்தேகத்தின் பேரில் கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் முல்லைத்தீவுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர் 41 வயதான திருகோணமலை பகுதியில் வசிப்பவர் என கூறப்படுகிறது.
கருத்துகள்