முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b118

 சிங்களவர்களிடம் இருந்து தமிழர்களிற்குத் தொற்றிய பாலியல் நோய் கவலையில் தமிழர்கள் .



பிரான்ஸில் யாழை பூர்வீகமாக கொண்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்!


பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற  யாழை பூர்வீகமாக கொண்ட  பதின்ம வயதான சிறுமியிடம் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர்  தகாத முறையில் நடந்துகொண்டமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 


சுவிஸ்லாந்தில்  வசிக்கும்   யாழ்ப்பாணத்தை  பூர்வீகமாகக் கொண்ட  தாயும்,  பதின்ம வயதான  மகளும் உறவினர் ஒருவரின் மகளின் திருமண நிகழ்விற்கு    பிரான்ஸ் சென்றுள்ளனர். 


 இதன்போது திருமண  நிகழ்வில் தாய் கலந்து கொண்டிருக்கையில்  திருமண வீட்டுக்கு வந்திருந்த மாப்பிளையின் நண்பனான இளம்  குடும்பஸ்தர்  ஒருவர்   சிறுமியை வெளியே அழைந்துச்சென்று தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகின்றது.


திருமண நிகழ்வில் நீண்ட நேரமாக மகளைக் காணாத  தாயார் கார் தரிப்பிடத்தில் உள்ள கார் ஒன்றிற்குள் மகள் நுழைந்ததைக் கண்டதாக சிறுவன் ஒருவன் கூறியதை கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார்.


அப்போது மகள் காரில் அலங்கோலமான நிலையில்  இருந்ததைக் கண்டு அவர்  அதிர்ச்சியடைந்துள்ளார்.


இதனையடுத்து திருமண  நிகழ்விற்கு வந்தவர்கள் அங்கு சென்று,  சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட  குடும்பஸ்தரைத் தாக்கியதாக கூறப்படுகின்றது.


இதேவேளை  குறித்த நபர் சிறுமியுடன்  காரில் இருக்கையில், தனது   செல்போனில்  அதனை வீடியோ எடுத்ததாக தெரியவந்த நிலையில், அங்கு கூடி இருந்தவர்கள்  தொலைபேசியை  அடித்து உடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.


அதன் பின்னர் தாயாரை மாப்பிளை வீட்டார் சமாதானப்படுத்தி மகளுடன் சுவிஸ்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


 சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டவர்,  கிளிநொச்சியை  பூர்வீகமாக கொண்டவர் என்றும்,   மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை புலம்பெயர் தேசத்தில் சிறுமியிடம்  நடத்தை பிறழ்வாக நடந்துகொண்டவர் தொடர்பில்  பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளதுடன்,  நிகழ்வுகளுக்கு  பிள்ளைகளை அழைத்துச் செல்கையில் பெற்றோர்கள் அவர்கள் தொடர்பில் விழிப்புடன்  இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?