பிரிட்டனில் கொரோனாவின் கதை முடிந்தது ? உண்மையில் பெரும் வெற்றி பெற்று விட்டது !
பிரித்தானியாவில் 7 வது நாளாக, இந்திய உருமாறிய கொரோனா வைரஸ் மற்றும் பிரேசில் உரு மாறிய வைரஸ் இவை இரண்டின் தொற்றும் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை அடுத்து தடுப்பூசிகள் போடப்பட்டதன் பலனை, நாம் பெற்றுள்ளோம் என்று சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இனி பிரித்தானியாவில் கொரோனா தொற்று என்பது ஒரு பெரிய விடையமே அல்ல என்ற அளவு நிலமை மாறிவிட்டது. ஹேட் இமியூனிட்டி என்ற, தடுப்பு சுவர் கொண்ட பாதுகாப்பு வலையம் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் கொரோனா வைரசால் பரவ முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே…
இனி கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் தேவை இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. 3ம் அலை 4ம் அலை என்று இனி எந்த ஒரு அலையும் அடிக்கப் போவது இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
கருத்துகள்