முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b106

 பிரித்தானிய அரசுக்கு கடும் எச்சரிக்கை



இங்கிலாந்து பிராந்தியத்தின் கொரோனா கட்டுப்பாடுகள் யாவும் எதிர்வரும் 19 ஆந் திகதியன்று முடிவுக்கு வரவிருப்பதை நேற்று பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ள பின்னணியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முற்றாக நீக்குவதால் பேரழிவுகள் ஏற்படும் என பிரித்தானிய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.


அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் அகற்றுவது பொறுப்பற்ற முடிவு எனவும் மூத்த மருத்துவர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.


ஜூலை 19 ஆம் திகதியன்று இங்கிலாந்து பிராந்தியத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ள நிலையில் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை இங்கிலாந்தின் மூத்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


கொரோனா கட்டுப்பாடுகளின் தளர்வு குறித்து நேற்று பிரித்தானியப்பிரதமர் பொறிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ள பின்னணியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.


புதிய தளர்வுகளின் அடிப்படையில் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாட்டு சமூக இடைவெளி விதிகள் கைவிடப்படும். சட்டப்பூர்வமாக முகக்கவசங்களை அணியவேண்டியதுமில்லை.


ஆனால் அரசாங்கத்தின் இவ்வாறான நகர்வுகள் ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகளையும் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் அனுமதிக்கப்படவேண்டிய நிலைமையை உருவாக்கும் என விஞ்ஞான ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.


மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் இன்னும் முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்பதால் வைரஸ் தனது பிடியை மீண்டும் இறுக்கிக்கொள்ள, இந்த தளர்வுகள் அனுமதிக்கும் என பிரித்தானிய மருத்துவ சங்கத்தின் தலைவரான மருத்துவர் சாந்த் நாக்பால் எச்சரித்துள்ளார்.


இந்தநிலையில் பிரான்சிலும் புதிய தளர்வுகள்; எச்சரிக்கையுடன் அறிவிக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் கொரோனா தொற்று குறித்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமான நடைமுறையாக வரவுள்ளது. நேற்று அரசதலைவர் இமானுவேல் மக்ரன் அறிவித்தபடி,


எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி முதல் முதல் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 50 க்கும் மேற்பட்டவர்கள் கூடும் இடங்களில் சுகாதார சான்றிதழ் அவசியமானதென அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?