முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b173

 அன்பான உறவுகளே,






அவுஸ்திரேலியாவில் வாழும் அனைத்து மக்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் சனத்தொகை கணக்கெடுப்பில் கலந்துகொள்ளமுடியும்.


இதனை இணையவழியாக (online) உங்கள் வீட்டுக்கு அனுப்பப்படும் பதிவிலக்கத்தை (Census number) கொண்டு அல்லது நேரடியாக இணையதளம் ஊடாக பதிவிலக்கத்தை பெற்று பூர்த்தி செய்யமுடியும். ஒரு வீட்டில் உள்ள ஒருவரே அவ்வீட்டில் உள்ள ஏனையவர்களுக்கும் பூர்த்தி செய்யமுடியும் என்பதால், இதனை உடனடியாக இணையவழியாக (online) பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


முன்னைய சனத்தொகை கணக்கெடுப்புகளில் தமிழர்களின் எண்ணிக்கை சரியாக பூர்த்தி செய்யப்படாததால், அதனை முழுமைப்படுத்தும் நோக்கோடு அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து தமிழர் அமைப்புகளும் இணைந்து, இச்சனத்தொகை கணக்கெடுப்பில் வீட்டில் பேசப்படும் ஆங்கிலம் தவிர்ந்த இன்னொரு மொழி (Does the person speak a language other than English at home?) என்பதற்கு TAMIL எனவும், எமது பூர்வீகம் (What is the persons ancestry?) என்பதற்கு TAMIL எனவும் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இச்சனத்தொகை கணக்கெடுப்பானது, ஒரு பிரதேசத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான புள்ளிவிபரமாக பயன்படுத்தப்படுகின்றது.


தமிழர்களின் எண்ணிக்கை சரியாக குறிப்பிடப்படுவதன் மூலம், தமிழ்மொழியிலான கல்வி வசதிகளை ஏற்படுத்தல் தமிழர்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கான முயற்சிகள் போன்றவற்றுக்கு உறுதுணையாக அமையும்.


அவுஸ்திரேலியாவின் 2011 சனத்தொகை கணக்கெடுப்பின் படி 50153 தமிழர்கள் வாழ்வதாகவும், 2016 சனத்தொகை கணக்கெடுப்பின் படி 73162 தமிழர்கள் வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களின் உண்மையான எண்ணிக்கை இதனிலும் அதிகமாகும்.


இச்சனத்தொகை கணக்கெடுப்பில் 10-08-2021 அன்று இரவு அவுஸ்திரேலியாவில் வாழக்கூடிய எவரும் பங்குகொள்ளமுடியும். எனவே இணையவழியில் இந்த இணைப்பின் ஊடாக சென்று இதனை உடனடியாகவே பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Online Link - https://form.census.abs.gov.au/get-census-number


இவ்வண்ணம்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?