முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b577

நமக்கு கடவுள் தந்த அற்புத வரம் தான் கஞ்சா! பெண் எம்.பி வெளியிட்ட தகவல்
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே (Diana Gamage) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குவது அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வுகளை கொண்டு வருவதோடு பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என தெரிவித்தார். இதேவேளை, சீனா மற்றும் கென்யா போன்ற பிற நாடுகள் தேயிலை பயிரிட ஆரம்பித்து சந்தைப் பங்கின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டதால் இனி தேயிலையை வணிகப் பயிரிட முடியாது. கஞ்சாவை இலங்கையில் வர்த்தகப் பயிர்ச்செய்கையாகக் கருதலாம். அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு முக்கிய ஏற்றுமதிப் பயிராகப் பயன்படுத்தப்படலாம். மற்ற நாடுகள் அதை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் வருமானத்தைப் பெறுகின்றன என்றார். மேலும், “இலங்கைக்கு தேயிலை இனி நீண்டகால வணிகப் பயிர்ச்செய்கையாக இருக்காது. இயற்கையாலும், கடவுளாலும் கஞ்சா செடி நமக்குக் கிடைத்த வரம். அரசின் அனுசரணையுடன் கஞ்சா வர்த்தகரீதியாக பயிரிடப்பட வேண்டும். இதனால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் கடனை அடைக்க அந்நியச் செலாவணியை சம்பாதிக்கலாம். சர்வதேச நாணயநிதியம் அல்லது வேறு எந்த நாட்டிலும் நாங்கள் பணத்தை பிச்சை எடுக்க வேண்டியதில்லை, ”என்று அவர் மேலும் கூறினார். கஞ்சா தொடர்பாக 1800களில் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட கட்டளைச்சட்டத்தை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும் என்றும் இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் சட்டங்களை இயற்றுமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார். ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் (EIB) கணிப்புகளின்படி, அடுத்த தசாப்தத்தில் உலகளாவிய கஞ்சா சந்தைப் பங்கு 1000% அதிகரிக்கும் என்றும், 2027 ஆம் ஆண்டில் இது 140 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார். கஞ்சா இறக்குமதியின் மூலம் பல வெளிநாடுகள் பெரும் வருமானத்தை ஈட்டுவதாக தெரிவித்த டயானா கமகே, உள்நாட்டில் ஒரு பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?