“கை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்கள்”
காத்திருந்து காத்திருந்து கார்த்திகை வந்ததும்
கார்த்திகைமலராய் பூத்திருந்து எமை பார்த்திருக்கும்-எம்
கார்த்திகை மலர்களை கைதொழ வாருங்கள் -உங்கள்
கைமலர் கொண்டு வையகம் எங்கிலும் வாழும்தமிழரே
கார்த்திகைமலர்களை பூசிக்க வாருங்கள்
ஈழம்மலரும் வேளையிலே – தம்
இதயதாகம் தீர்ந்ததென
ஈழத்தாயினை வாழ்த்திடவே
கல்லறையில் கண்விழித்துக் காத்திருக்கும்
எம்காவல் தெய்வங்களை போற்றிடவே வாருங்கள்
போற்றியே போற்றியே தீபம் ஏற்றிட வாருங்கள்.
ஏற்றிவைக்கும் தீபத்தின் ஒளியாய் நின்று
எம்மினத்தின் இருளகற்றி ஓளியேற்ற வேண்டி
போற்றிடவே வாருங்கள் கண்ணீர்ப்பூக்கள் தூவி
கரம் கூப்பிட வாருங்கள் – கரம் கூப்பிட வாருங்கள்
கல்லறைத் தெய்வங்களின் புனிதம் போற்றி -அதை
காணும் எம் மனங்களிலே மனிதம் ஏற்று
அல்லல்கள் அவலங்கள் அனைத்தும் வெல்ல
அகிலத்தில் வாழும் தமிழர்களே அன்பால் இணைந்து
ஒன்றுகூடியே வாருங்கள் கை ஒன்று சேரவே வாருங்கள்.
கவிதை : ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்