முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b542

லண்டனில் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல்: பொலிஸார் அவசர கோரிக்கை
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் 8 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கொண்டு பயங்கர ஆயுதத்துடன் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. லண்டனின் Walthamstow-ல் உள்ள Brookscroft சாலையில் உள்ள குடும்பத்தினர் இருக்கும் வீடொன்றில், ஏப்ரல் மாதம் 1-ஆம் திகதி முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதேவேளை, வீட்டின் உள்ளே இருந்த 4 பேர் அவர்களுடன் போரடியதால், 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அந்த கும்பல் பொலிசார் வருவதற்குள் பொருட்களை திருடாமல் அங்கிருந்து ஓடியுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸாருடன் விரைந்த தடயவியல் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். அதன் பின் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அதே நாள் இரவு Essex-ல் உள்ள Clacton-on-Sea-ல் உள்ள இரவு விடுதியில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இந்த இரு சம்பவங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று இது இரு திகிலூட்டும் அனுபவமாக குடும்பத்தினருக்கு இருந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சிலரின் புகைப்படங்களை வெளியிடுவதாகவும், அவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி பொலிஸாரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?