முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b557

மாவீரர்களை கொச்சைப்படுத்தும் செயல் - அறிவிப்பை மீளப்பெறுமாறு பகிரங்க கோரிக்கை
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி "மதங்களைக் கடந்து இறந்தவர்களை நினைவு கூறுவோம்" என வடக்கு கிழக்கு ஆயர்கள் கூட்டாக அறிவித்திருப்பதானது மாவீரர்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் (Marikuththu Sakthivel) தெரிவித்தார். இந்த விடயத்தில் வேறு எந்த ஒரு மத தலைவர்களுடனும் கலந்தாலோசிக்காது ஆயர்கள் தன்னிச்சையாக தீர்மானத்திருப்பது, மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயலாக இருக்கலாம் எனவும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் ஐபிசி தமிழ் செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார். வடக்கு கிழக்கில் போரினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் விசேட வழிபாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதி அனைத்து ஆலயங்களிலும் இடம்பெறவுள்ளதாக வடக்கு கிழக்கு ஆயர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமையை குறித்த நாளன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளில் மக்கள் ஈடுபடவும் இல்லங்களில் தீபம் ஏற்றி இறை வேண்டல் புரியவும் அழைப்பு விடுப்பதாக ஆயர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ, மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா மற்றும் திருகோணமலை ஆயர் நோயல் இமானுவேல் ஆகியோர் இதற்கான அழைப்பினை விடுத்துள்ளனர். இந்த விடயத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், ஆயர்களின் அறிவிப்பு மீளப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழர்களின் உரிமை போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், 20ஆம் திகதி போரில் மரணித்தவர்களை நினைவு கூருவது மாவீரர்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடாக அமையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?