முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b583

யாழ்.வீராங்கனைகள் இருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
இலங்கை 21 வயது மகளிர் கிரிக்கெட் தேசிய 20 பேர் கொண்ட அணியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் இருவர் இடம்பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, மகாஜனக் கல்லூரியின் முன்னாள் மாணவியும் (2019 A/L) ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் கற்கைநெறியின் முதலாம் வருட மாணவியுமான சானு பாஸ்கரன் இடம்பெற்றுள்ளார். மேலும், இவருடன் யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவி மதுரிகா முரளிதாசனும் தெரிவாகியுள்ளார். சானு பாஸ்கரன் (Shanu Baskaran) கடந்த வருடம் இலங்கை மகளிர் உதைபந்தாட்ட தேசிய அணியிலும் தெரிவாகி தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டியிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 2019 இல் யா/மகாஜனக் கல்லூரி 20 வயது பெண்கள் உதைபந்தாட்ட அணி தேசியமட்ட சாம்பியனாகிய போது சானு பாஸ்கரன் விளையாடினார் என்பதுடன் இறுதிப்போட்டியில் வெற்றிக்கோல் போட்டார் என்பதும் சிறப்பம்சம் ஆகும். இரு துறைகளிலும் தனது அபார திறமைகளை வெளிப்படுத்திவரும் சானு பாஸ்கரன் 2019 A/L பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று, விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் கற்கைநெறியை விரும்பி தெரிவுசெய்து, ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவியாக பயின்று வருகின்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?