முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b588

லண்டனில் தீ விபத்தில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் : வெளியான புகைப்படம்
லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம்: அடுத்தடுத்து வெளிவரும் தகவல் லண்டனில் தீ விபத்தில் சிக்கி இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயர்த்தை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய தலைநகரான லண்டனின் பெக்ஸ்லி ஹீதில் உள்ள குடியிருப்பு ஒன்றில், நேற்று (18) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும், மகளும், மற்றும் மகளின் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. இதேவேளை, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் திருகோணமலை சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தின் போது, குறித்த வீட்டின் ஜன்னல் வழியாக நபரொருவர் குதித்து தீக்காயங்களுடன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாக தெரியவந்துள்ளது. இதேவேளை வீட்டிலிருந்து குதித்த நபர் பெண்ணின் மைத்துனர் என்று கூறப்படுகிறது. அவருடைய உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியில், தீ விபத்து ஏற்பட்டவுடனே அந்த பெண் உடனடியாக வேலைக்கு சென்றிருந்த தன்னுடைய கணவருக்கு போன் செய்துள்ளார். Yogan என்று அறியப்படும் அவர் இது குறித்து அறிவதற்குள்ளே, குடும்பத்தினர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளார். இது குறித்து Yogan-ன் உறவினர் கூறுகையில், சம்பவ தினத்தன்று இரவு 8.30 மணியளவில் அவருடைய மனைவியிடம் இருந்து போன் அழைப்பு வந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து Yogan பேசிய போது, மனைவி தீ மற்றும் நெருப்பு என்று ஒரு வித பயத்துடன் கூறிக் கொண்டிருந்த போதே போன் கட் ஆகிவிட்டது. இதையடுத்து உடனே அவர் செல்ல முயன்றார், ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறினார். தீ விபத்து ஏற்பட்ட தினத்தன்று உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர். இதில் வீட்டின் தரைத் தளம் பாதி எரிந்துவிட்டதாகவும், முதல் தளம் முழுவதுமே இடிந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்புடைய செய்தி லண்டனில் தீ விபத்தில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் : வெளியான புகைப்படம் பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த கதி; பெரும் சோகத்தில் அப்பகுதி மக்கள்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?