முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b558

விளிப்பாகயிருக்கும் தமிழர்கள்
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக, வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட வீர விடுதலைப் போரை நிகழ்த்திய மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி அன்று, வேண்டுமென்றே திட்டமிட்டபடி திகதி குறிக்கப்பட்டு, தமிழ்த்தேசியத்திற்கு எதிரான திரைப்படம் ஒன்று வெளிடப்பட உள்ளது. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக, வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட வீர விடுதலைப் போரை நிகழ்த்திய மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி அன்று, வேண்டுமென்றே திட்டமிட்டபடி திகதி குறிக்கப்பட்டு, தமிழ்த்தேசியத்திற்கு எதிரான திரைப்படம் ஒன்று “சிவாவின் மகள்” (Shiva’s Daughter) என்ற பெயரில் ஆங்கில மொழியில், பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் திரு. மனோ மனுவேற்பிள்ளை என்பவர் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களுடன் பிரித்தானியாவிலே நெருங்கிய தொடர்புகளை பேணிக்கொண்டிருக்கின்றார் என்பது இங்கே மிகவும் குறிப்பிடவேண்டியது. மாவீரர் தின நாளில், இந்தப் படத்தின் முதன்மையான காட்சியானது காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையானது, இந்தத் திரைப்படத்தின் மீதான சந்தேகத்தை முழுமையாக நிரூபித்திருக்கின்றது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரைப் பயன்படுத்தி, தமக்கேற்றால்போல் பிழைப்பு நடாத்தும் இந்த வியாபார சந்தையாளர்களிடம் இருந்து எமது இனத்தின் வலிகளை மீட்டு விடுதலை நோக்கி தொடர்ந்து ஒரே வழியில் பயணிப்பதற்காக, இந்தத் திரைப்படம் முழுமையாக தமிழர்களால் புறக்கணிக்கப்பட வேண்டும். தமிழ் பெண் ஒருவர் சிங்கள இனத்தவரைக் காதலிப்பதாகவும், அவர் எம்மவர்களின் தாக்குதலில் காயப்பட்ட பின்னர், அவருக்காகத் தமிழ்ப்பெண் தன் உயிரைக் கொடுப்பதாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது. தயவுசெய்து விழிப்படைவோம். இத் திரைப்படத்தை தடை செய்வோம்! ஒன்றாகக் குரல்கொடுப்போம் இந்த மாவீரர் மாதத்தில் …!!!

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?