முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b767

இருபரும் கோத்வாய செல்லப்பிள்ளைகள் யார் பக்கம் நீதி வளங்கப்படும் பொறுத்துயிருந்து பாருங்கள் மக்களே?
வியாழேந்திரன் வீட்டிற்கு முன் இளைஞன் படுகொலை - விசாரணை செய்ய சுமந்திரன் நீதிமன்றில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னாள் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட போது அமைச்சர் தனது வீட்டிலே இருந்தார் என்றும் அதற்கு பின்னர் தான் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றார் என்ற சாட்சியங்கள் சம்மந்தமாகவும் சம்பவம் தொடர்பாக அவருடைய தொலைபேசியிலிருந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தது தொடர்பாக விசாரிக்வேண்டும் என நகர்த்தல் பத்திரம் மூலம் இன்று திங்கட்கிழமை (24) நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சரின் வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் மாகாலிங்கம் பாலசுந்தரம் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுக்கொள்ளப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் சார்பில் சட்டத்தரணி கமலாநாதன், ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் ஆகியோர் ஆஜராகிய பின் ஊடகங்களுக்கு கரத்து தெரிவித்த எம்.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த படுகொலை தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் உகந்த முறையில் இதற்கு விசாரணை செய்யவில்லை என்ற காரணத்தினால் ஏறாவூர் பொலிசாருக்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது. படுகொலை செய்யப்பட்டவரின் தந்தை, தாய் சார்பாக சட்டத்தரணி கமலதாஸ் உடன் நான் நீதிமன்றில் ஆஜராகி இந்த வழக்கை வேறு ஒரு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுமாறு விண்ணப்பித்தபோது ஏறாவூர் பொலிசார் உகந்த முறையில் விசாரணை செய்யவில்லை என ஏற்கனவே இது இரண்டாம் தடவையா கரடியனாறு பொலிசாருக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்தார். அதேவேளை நீண்ட நாட்களாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை வராமல் இருந்த முறைப்பாட்டையும் செய்தோம் அது சில நாட்களுக்கு முன் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது அதன் பிரதியை பெற்றுக் கொள்ளலாம் என நீதவான் தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்தபோது குறித்த அமைச்சர் தனது வீட்டிலே இருந்தார் என்றும் அதற்கு பின்னர் தான் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றார் என்ற சாட்சியங்கள் சம்மந்தமாக விசாரிக்கவேண்டும். அத்தோடு இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததே அமைச்சர் தான். அவர் தன்னுடைய தொலைபேசியிலிருந்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கொடுத்ததாக நீதிமன்றத்தில் பதிவாகியிருக்கிறது. ஆகையினால் அந்த தொலைபேசி அந்த நேரத்திலே எங்கிருந்தது என்பது இலகுவாக விசாரித்து அறியக்கூடிய ஒரு விடையம் அது மட்டக்களப்பில் இருந்தா அல்லது கொழும்பில் இருந்த அந்த அழைப்புச் சென்றதா? என இலகுவாக அறிய முடியம். ஆகவே அதனையும் விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த வழக்கு நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்டமையினால் குறித்த பொலிசார் மன்றில் ஆஜராகியில்லாத காரணத்தால். அடுத்த தினமான பெப்ரவரி 2ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது இந்த விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறும் அந்தவேளையில் குறித்த உத்தரவை தான் பிறப்பிப்பதாகவும் நீதவான் குறிப்பிடதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?