முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b744

உலக சாதனை படைத்த இலங்கையைச் சேர்ந்த சிறுவனின் ஆசை இதுதான்!
படித்து விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம். விபரம் தெரிந்த வயதில் இருக்கும் போது எனது தாத்தா ஒரு உலக உருண்டையினை கொண்டு வந்து அதில் உள்ள உலக நாடுகளை அடையாளம் காணுவதனை எனக்கு கற்றுத்தந்தார். அதனை கருத்தில் கொண்டு நான் உலக நாடுகளை அடையாளம் காணுவதில் உலக சாதனையினை படைத்துள்ளேன் என பிரபாகர் லவனீஸ் (Prabhakar Lavanis) தெரிவித்துள்ளார். இதனை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இன்னும் சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்ற ஆர்வமும் தோன்றுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவரிற்கு நேற்றைய தினம் இடம்பெற்ற பாராட்டு வைபவத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது கல்வி சமூத்தினராலும், பிரதேச நலன் விரும்பிகனாலும் மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பலரால் வாழ்த்துரைகளும் வழங்கப்பட்டன. கொட்டகலையைச் சேர்ந்த பிரபாகர் - ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவனீஸ் மிக இள வயதில் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளை அடையாளம் காணும் சாதனையை படைத்துள்ளார். அதி வேகமாக உலக நாடுகளை உலக வரைப்படத்தின் அனைத்து நாடுகளையும் துல்லியமாக அடையாளம் காட்டி அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். எவ்வித அடையாளங்களோ அல்லது எந்தவிதமான எழுத்துக்களோ இல்லாத நிறங்களில் மட்டும் நாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட உலக வரைபடத்தில் லவனீஸ் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவ்வாறு உலக நாடுகளை அடையாளம் காட்டுவதற்காக லவ்னீஸ் 3 நிமிடங்கள் 16 செக்கன்களை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை ஓர் கணனி போதனாசிரியர் என்பதுடன் தாய் லிந்துலை - தலவாக்கலையின் மருத்துவர் தற்பொழுது கொட்டகலை பிரதேசத்தில் வசித்து வரும் லவனீஸ் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார். 5 வயது 7 மாதங்கள் 27 நாட்களில் அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு உரையாற்றியவர்கள் உலக சாதனை என்பது ஒரு சாதாரண விடயமல்ல இவ்வாறு உலக சாதனை படைக்கக்கூடியவர்கள் எமது மண்ணில் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் முன்வருதற்கும் எமது மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதற்கும் இவ்வாறான பாராட்டுக்கள் அவசியமாகும். இது இத்துடன் நின்று விடாது திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறானவர்களை பாராட்டுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமையினையிட்டு பெருமையடைவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?