முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b739

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பிரபலத்தை பொது இடத்தில் அவமதித்த பெண் (Video)
இலங்கைத் தமிழ் பின்னணி கொண்டவரான ரொமேஷ் ரங்கநாதன் (Romesh Ranganathan 43), ஒரு நடிகர், நகைச்சுவையாளர் என பிரித்தானியாவில் பிரபலமாக அறியப்பட்டவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியவரான ரங்கநாதன், நேற்றுமுன்தினம் வெளிப்படையாக பொது இடம் ஒன்றில் இனரீதியாக அவமதிக்கப்பட்டார். லண்டனிலுள்ள Hammersmith Apollo அரங்கில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார் ரங்கநாதன். அப்போது இனவெறுப்பு தொடர்பான ஒரு பேச்சு வந்திருக்கிறது. அப்போது, அரங்கில் அமர்ந்திருந்த ஒரு பெண் எழுந்து நேரடியாக ரங்கநாதனை இனரீதியாக கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்துக்குமேல் அதைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் ரங்கநாதன் பாதுகாவலர்களை அழைக்க, அவர்கள் வந்து அந்தப் பெண்ணை அரங்கத்திலிருந்து வெளியேற்றினார்கள். ஒரு பக்கம் ஒரு பெண் இனரீதியாக விமர்சித்த விடயம் வேதனையை ஏற்படுத்தியது என்றாலும், மறுபக்கம், அந்த பெண்ணுக்கு எதிராக மொத்த அரங்கமும் ’கிளம்பு, காற்று வரட்டும்’ என்ற தொனியில் முழங்கியதையும், வெளியாகிய வீடியோ ஒன்றில் காண முடிகிறது. இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்ட ரங்கநாதன், அதே நேரத்தில், தனக்கு ஆதரவாக குரல் எழுப்பிய மக்களுக்கு தன் பாணியில் நகைச்சுவையாக நன்றியும் தெரிவித்துக்கொள்ள, நிகழ்ச்சி தொடர்ந்தது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?