முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b769

மோசமான செயலில் ஈடுபட்ட இளைஞரொருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் புதிய கொலனி பகுதியில் 13 அகவை சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் கைதான இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாங்குளம் பகுதியில் உள்ள டயர் கடை ஒன்றில் வேலை செய்வதற்காகத் திருகோணமலையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைதேடி வந்துள்ளார். இவர் தங்குவதற்காக மாங்குளம் புதிய கொலனி பகுதியில் கிராம மட்ட அமைப்புக்களின் பரிந்துரையுடன் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், திருகோணமலை - மூதூர் பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவன் அதே பிரதேசத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி ஒருவரை அழைத்து வந்து சுமார் ஒரு மாதகாலமாக குறித்த டயர்க்கடையில் வேலை செய்த இளைஞர் பெற்றுக்கொண்ட வாடகை வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த சிறுமி தொடர்பிலான தகவல் புதிய கொலனி பகுதியில் கிராமத்தில் அலசல் புரசலாகப் பேசப்பட்டு சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளமையினை தொடர்ந்து சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய இளைஞரை மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் 13 அகவை சிறுமியினையும் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 15.01.2022 அன்று இடம்பெற்றுள்ளது. சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள நிலையில் சிறுமி குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இளைஞர் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதி வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வழக்கு விசாரணைகள் திருகோணமலை மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?