முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b730

காணமல் போனவர்களை தேடுவது ஒரு பக்கம் இருப்பவர்களை பாதுகார்க்க முடியாதே அவல நிலை மறுபக்கம் தொடரும் இனவளிப்பு.
முடியால்ருயாழ்.பல்கலைக்கழக மருத்துவ மாணவன் மரணம்: சகோதரனின் பகீரங்க அறிவிப்பு! யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதி மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் சகோரன் அறிவித்துள்ளார். யாழ்.வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் மரணம் தற்கொலை என பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதிலும் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கருதும் குடும்பத்தினர் தொடர்ந்து நீதி கோரி போராடி வருகின்றனர். இந்த நிலையில் தனது சகோரன் கொலை செய்யப்பட்டதாகவும், அதனை மூடி மறைத்து பொலிஸார் தற்கொலை மரணம் என நிரூபிக்க முயல்வதாகவும் தெரிவித்து, சகோதரனின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதி மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இளங்குன்றனின் சகோதரன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருட மாணவனாக கல்வி கற்று வந்த எனது சகோதரன் சிதம்பரநாதன் இளங்குன்றன் வைத்தியராக வந்துவிடுவார் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டார். இதனை பொலிஸார் மூடி மறைத்து தற்கொலை என காண்பிக்க முயல்கின்றனர். எனது சகோதரனுக்கு நீதி வேண்டி ஜனாதிபதி மாளிகை முன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இம் மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ளேன். இதற்கு ஆதரவாக யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டு எனது சகோதரனின் கொலைக்கு நீதியை பெற்றுத்தருமாறு அனைத்து முகநூல் நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.” என உள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?