முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b728

பிரித்தானியாவில் உயிருக்கு போராடி வரும் இலங்கை தமிழர் வெளியிட்ட உருக்கமான தகவல்! இலங்கையை பிறப்பிடமாக கொண்ட உலக சேவையின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா (George Alagaiya) புற்று நோய் (Cancer) பாதிப்பில் போராடி வரும் நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இதேவேளை, தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் தன்னை தனது மனைவியுடன் நெருக்கமாக்கியுள்ளதென ஜோர்ஜ் அழகையா விளக்கியுள்ளார். 66 வயதான ஜோர்ஜ் அழகையா பிரித்தானியாவில் வசித்து வருகின்றார். மேலும், ஜோர்ஜ் அழகையா தனக்கு 4-வது நிலை குடல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதனை 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக அறிந்துக் கொண்டார். ஒக்டோபர் மாதத்தில் புற்றுநோய் அதிகரித்த நிலையில் அவர் சர்வதேச செய்தி சேவை பணியில் இருந்து ஓய்வு பெற்று சென்றுள்ளார். இந்நிலையில் பிரித்தானிய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட ஜோர்ஜ் அழகையா, தான் வாழும் வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார். எனினும் புற்று நோய் தன்னை இறுதி வரை கொண்டு சென்றதாக கூறியுள்ளார். “என்னால் இந்த விடயத்தில் இருந்து விடுபட முடியும் என நான் நினைக்கவில்லை. எனக்கு இன்னும் புற்றுநோய் இருக்கிறது. நான் மெதுவாக மீண்டு வர முயற்சிக்கின்றேன். ஒவ்வொரு முறையும் எனது மருத்துவர்கள் சிறப்பாக செயற்பட்டார்கள். மேலும், எனது வைத்தியர்கள் ஒவ்வொரு முறையும் சிவப்பு பேருந்து முழுவதும் மருந்துடன் பின் தொடர்ந்தார்கள். இருப்பினும் இறுதி வரை போராடும் நான் மிகவும் அதிஷ்டசாலியாகவே உணர்கின்றேன். இறுதி வரை போராடுவேன். இருப்பினும், தான் வாழ வேண்டிய 7 ஆண்டுகள் புற்று நோயுடன் போராட வேண்டியிருந்தமை சற்று வருத்தமாகவே உள்ளது. தற்போது நான் என் மனைவி ப்ரொன் குறித்தே சிந்திக்கின்றேன். அவரிடம் அனைத்தையும் கூறியுள்ளேன். மேலும், என் மனைவியை விட்டுப் பிரியும் எண்ணத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் விரும்பும் பெண்ணின் எதிரில் அமர்ந்து அவருடனான பயணத்தை முடிக்க முடியாது என அவரிடம் கூறுவதற்கான வழியை கண்டுபிடிப்பது கடினம். எனினும் இந்த காலப்பகுதி எங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஒருவருக்கொருவர் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். மேலும், நாம் ஒன்றாகக் கற்பனை செய்த காரியம் நடக்காமல் போகலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். ப்ரான்ஸ் என்ற பெண்ணை 36 வருடங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் சந்தித்த அழகையா அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஒரு இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?