இலங்கை அரசியலை தீர்மானித்த விடுதலைப் புலிகள்! கோட்டாபயவால் பதவி பறிக்கப்பட்ட சுசில் பகிரங்க தகவல்
இதுவரை காலமாக நாட்டின் அரசியலை தீர்மானித்தது விடுதலைப் புலிகளின் போராட்டமே. யுத்தத்தை வைத்தே அரசியல் செய்யும் நிலைமை இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அரசியல் பொறிமுறையில் மாற்றம் அவசியமாகியுள்ளது. தற்போது மாற்றத்தை நோக்கிய அரசியல் கலாசாரம் உருவாகிக் கொண்டுள்ளதை நாம் அவதானிக்கின்றோம்.
இத்தனை ஆண்டுகால சம்பிரதாய அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுபட்டு மக்கள் மாற்றுச் சிந்தனையில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
மக்கள் புத்திசாலித் தனமான தீர்மானங்களை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர். இன, மத, மொழி, பிரசாரங்களை செய்து இனியும் தேர்தலில் வெற்றிப்பெற முடியாது.
அந்த சிந்தனையில் இருந்து மக்கள் விடுபட்டு வாழ்வாதாரம் குறித்து சிந்திப்பதற்கு ஆரம்பித்து விட்டனர். நாட்டின் இளம் தலைமுறையினர் பாரிய அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டை விட்டு வெளியேறும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே புரட்சி ஒன்றுக்கான ஆரம்பம் தெளிவாகத் தென்படுகின்றது.
எனவே கடந்த காலத் தவறுகளை நிர்வத்தி செய்யக் கூடிய தேவை கட்டாயம் எமக்கு உள்ளது. எனவே அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் ஒன்றிணைவோம்.
ஒன்றை கவனிக்க வேண்டும், இதுவரை காலமாக நாட்டின் அரசியலை தீர்மானித்தது விடுதலைப் புலிகளின் போராட்டமே. யுத்தத்தை வைத்தே அரசியல் செய்யும் நிலைமை இருந்தது.
ஆனால் 2015ஆம் ஆண்டில் முதல் தடவையாக பிரிவினைவாதத்தை தாண்டி குடும்ப அரசியலை வீழ்த்த வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் நல்லாட்சியை உருவாக்கினர்.
தற்போது மக்கள் அந்த நிலைப்பாட்டையும் தாண்டி சென்றுள்ளனர். கூட்டணி அரசாங்கம் குறித்து இனியும் சிந்திக்க முடியாது. இந்தக் கூட்டணிகளின் பேச்சு எல்லாம் அரசாங்கத்தை அமைக்கும் வரையில் தான்.
அதற்கு பின்னர் தனி அரசாங்கமே ஆட்சியை தீர்மானிக்கின்றது. ஆகவே இனியும் இந்தக் கலாசாரம் இருக்கக் கூடாது. ஆகவே இளம் தலைமுறையினரே இப்போது தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்