முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று என்ன நிலை!
இலங்கையில் மக்கள் தற்போது அதியாவசிய பொருட்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் அன்று முள்ளிவாய்க்காலில் நம்மவர்கள் செத்துமடிகையில் வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைகண்டு கவிதையொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது. அந்தக் கவிதை பின்வருமாறு,
முள்ளி வாய்க்காலில்
கஞ்சிக்காக கோப்பையுடன் நீண்ட வரிசையில்
பிஞ்சுகளெல்லாம் நின்ற போது
நெஞ்சை நிமிர்த்தியே வேடிக்கை பார்தீர்கள்
அக்கினியின் குஞ்சொன்று
விசுக்கோத்து சாப்பிட்டபின்
மார்துளைத்து செத்து கிடந்தபோதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
பிடிபட்ட பெண்டிர்களை நிர்மூலம் ஆக்கிவிட்டு
சிரித்து நின்ற போதும் வேடிக்கை தானே பார்த்தீர்கள்
சாலையோரம் போனவர்கள்
காணாமல் போனபோது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
வைத்தியசாலைகள் மீது குண்டுகள் பொழிந்த போது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும்
கந்தக குண்டை வீசும் போது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
கிழங்குக்காக வரிசையில் நின்றவர்களை
கிளஸ்ரர் குண்டு போட்டு அவிந்த போதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
மருந்தும், மாத்திரையும் உணவும் ,
உடுப்பும் அங்கு அனுப்பாமல் விட்ட போதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
குண்டடிபட்டு இறந்தவள் மார்பில்
குழந்தை முலை சூப்பியபோது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தோர்
எங்கென்று கேட்டபோதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
முட்கம்பி வேலிகளுக்குள்
முன்னூறாயிரம் பேர் அடக்கி வைக்கயிலும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
அத்தியாவசியம் அனைத்துக்குமாய் இப்போது
நீண்ட வரிசையில் நீங்கள் நிற்கும் போது
எம்மால் உமைப்போல வேடிக்கை பார்க்க முடியவில்லை
மனம் கொதிக்கிறோம்
வேடிக்கை என்னவென்றால்
மேல்சொன்ன எல்லாவற்றையும்
எமக்கு தந்தவர்களால் தான் உமக்கும் தரப்படுகிறது
காலம் எவ்வளவு விரைவாக காட்டும் என்பது இதுதானா!
- மதுசுதன்
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்