முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b754

சீக்கிரம் பேன்டமிக் முடியும்.. ஆனால் கொரோனா நம்முடனேயே “வாழும்”.. நிபுணர்கள்!
கொரோனா பேன்டமிக் விரைவில் முடிவடையும். இருந்தாலும் கொரோனாவைரஸ் நம்முடனேயே இருக்கும் என நிபுணர்கள் கருத்து. ஓமைக்ரான் வேரியன்ட் உலகம் முழுவதும் பரவி வருவதன் மூலம் விரைவில் பேன்டமிக் எனப்படும் பேரிடர் காலம் முடிவுக்கு வரும் என்று ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். சில காலத்திற்கு பேன்டமிக் தொடரும் என்றாலும் கூட இது அப்படியே நீடிக்காது. மாறாக முடிவுக்கு வரும். அதேசமயம், கொரோனாவைரஸ் உலகை விட்டுப் போகாது. நம்முடனேயே அது நீடிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஐரோப்பிய மருந்துகள் கழகம் என்ற அமைப்பின் தலைவர் மார்கோ கவலேரி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், நான்காவது பூஸ்டர் ஊசி தேவையில்லை என்பது எங்களது கருத்து. இதனால் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே இப்போதைக்கு அதைத் தவிர்ப்பது நல்லது. மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக அதிகரித்துள்ளது. ஓமைக்ரானும், வழக்கமான வேரியன்ட்கள் போல இல்லாமல் வீரியம் குறைந்ததாகவே இருக்கிறது. அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே விரைவில் என்டமிக் நிலை மாறும், அதை ஓமைக்ரான் செய்யும் என்று நம்புகிறோம். இருப்பினும் இன்னும் நாம் பான்டமிக் நிலையிலிருந்து விடுபடவில்லை. எனவே தொடர்ந்து தற்காப்பு நடவடிக்கைகளை நாம் தொடர வேண்டும் என்றார் அவர். பல்வேறு நாடுகளின் நிபுணர்களும் கூட ஓமைக்ரான் மூலம் பான்டமிக் முடிவுக்கு வரும் என்றுதான் சொல்லி வருகின்றனர். பான்டமிக் முடிந்தாலும் கூட என்டமிக் என்ற நிலையை கொரோனாவைரஸ் எட்டி விடும். அதாவது பூமியை விட்டு இந்த கொரோனாவைரஸ் அழியாது. மாறாக அவ்வப்போது தலை தூக்கும், பிறகு மறையும். இப்படியாக அது நீடித்துக் கொண்டிருக்கும் என்பதே நிபுணர்களின் கணிப்பாகும். தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் ஓமைக்ரான் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் பரவல் வேகம், முந்தைய வேரியன்ட்களை விட பல மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் மிகக் குறைவாகவே நிகழ்ந்துள்ளதும் ஆறுதல் தரும் அம்சமாகும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?