முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b776

தமிழக மக்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் மக்கள் தமது முடிவை அறிவிக்கக் கூடிய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தத் தமிழக மக்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - நெல்லியடியில் 13 ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களை முடக்குகின்ற தரப்புக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 30 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு ஆதரவு கோரி பரப்புரையில் இன்று ஈடுபட்ட போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைக்கு இலங்கை அரசு சீனா என்கின்ற விடயத்தைப் பயன்படுத்தி இந்தியாவைக் கொண்டு இந்த ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற இந்த வேலையைச் செய்விக்கின்றது. இந்த இடத்திலேயே வந்து நாங்கள் தமிழ்நாட்டு உறவுகளை உரிமையுடன் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம். தங்களுடைய மத்திய அரசுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்பு நிராகரித்து அந்த நிராகரிப்பு செய்ததினாலே இத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டிய இடத்திலே ஒரு இன அழிப்பைச் செய்து இனத்தை அழித்து அதற்கும் இந்தியா துணை போனது. அழித்துவிட்டு இன்றைக்கு மிக மோசமான ஒரு கோரிக்கை இலங்கை கேட்பதற்காக தன்னுடைய வல்லரசு நலன்களுக்காக மட்டும் ஒரு இனத்தினுடைய எதிர்காலத்தை அழிக்கின்ற வகையிலே செயற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தால் மட்டும்தான் அதனைச் செய்யலாம். அந்த வகையிலே வந்து இந்திய மத்திய அரசுக்கு எதிர்ப்ப தெரிவிக்கின்ற வகையிலே தமிழகத்திலே இருக்கக்கூடிய மற்றும் உலகத்திலே இருக்கின்ற மனித நேயத்தை நேசிக்கின்ற அனைத்து இந்தியப் பிரஜைகளுக்கும் வந்து இந்த 13 ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சொல்லிக் கேட்கின்ற இந்த கோட்பாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்ற, தமிழருடைய தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற தமிழருடைய இறைமை அங்கீகரிக்கப்படுகின்ற, சுய நிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய ஒரு சமஷ்டி தீர்வை கோருவதற்கு அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அது சம்பந்தமாக இறுதியிலே தமிழ் மக்கள் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக அவர்களுடைய முடிவை அவர்களே அறிவிக்கக் கூடிய வகையிலே இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?